வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரம் மழை வாய்ப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, November 28, 2015

வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரம் மழை வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகள் சிலவற்றில், அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஸ்டெல்லா இன்று கூறும்போது, "தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி, மேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடலில் தற்போது நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்துக்கு, தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்றார் ஸ்டெல்லா.

தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக கனமழை நீடித்த நிலையில், சில தினங்களாக ஒரு சில பகுதிகளில் மட்டும் மழை பெய்தது. இதனால், இயல்பு வாழ்க்கை திரும்பி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment