கணினி பாடமே இல்லாத மாநிலம் ஆனது தமிழகம்..
கோவை: மத்திய அரசு வழங்கிய ரூ.870 கோடி நிதி தி.மு.க. ஆட்சியில் மடைமாற்றம் செய்யப்பட்டதால், அரசு பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு வரை கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் இல்லாத ஒரே மாநிலமாக மாறியுள்ளது தமிழகம் என, கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
'சமக்ரா சிக்சா' திட்டத்தில், அரசு பள்ளிகளில் தகவல் தொடர்பு தொழில்நுட்ப (ஐ.சி.டி.) ஆய்வகம் அமைத்தல், பயிற்றுநர் நியமனம், மின் கட்டணம், இணைய வசதி ஆகியவை ஏற்படுத்த மத்திய அரசு நிதி வழங்குகிறது. அதன்படி, அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் 10ம் வகுப்பு வரை, தனி பாடமாக தகவல் தொடர்பு தொழில்நுட்பம் இடம்பெற வேண்டும்.
தமிழகத்துக்கு மத்திய அரசு இதற்காக 870 கோடி ஒதுக்கியும், அதற்கான எந்த நிபந்தனைகளையும் திமுக அரசு பூர்த்தி செய்யவில்லை. 2024் கேரள அரசுக்கு சொந்தமான கெல்ட்ரான் நிறுவனம் தமிழக பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைத்தது.
ஆனால், 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தில் செயல்பட்ட தன்னார்வலர்களையே, 'ஆய்வகத்தை நிர்வகிப்பவர் மற்றும் பயிற்றுநர்' என்ற புதிய பதவியை உருவாக்கி, அதில் திமுக அரசு நியமித்தது, என்கிறார் தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலாளர் குமரேசன்.
அவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் 'எமிஸ்' 'யுடைஸ்' தரவு பதிவேற்ற வேலைகளை மட்டுமே செய்கின்றனர். கணினி கல்வி பயிற்றுவிக்க தேவையான தகுதிகளும் அவர்களுக்கு இல்லை. இப்படி மத்திய நிதியை தி.மு.க. ஆட்சியில், பள்ளிக்கல்வி துறை மடைமாற்றியதால், கிராமப்புற ஏழை மாணவர்களின் வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது, என குமரேசன் தெரிவித்தார்.
தனியார் பள்ளிகள் முதல் வகுப்பிலேயே கணினி பாடம் நடத்துகின்றன. அரசு பள்ளியில் பிளஸ் 1 வந்த பிறகுதான் கணினி அறிவியல் படிக்க முடிகிறது. மற்ற மாநிலங்களில் 6ம் வகுப்பில் இருந்தே தகவல் தொடர்பு தொழில்நுட்பம் தனி பாடமாக கற்பிக்கப்படுகிறது.
கேரளாவில் 1ம் வகுப்பில் இருந்தே தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் கணினி அறிவியல் பாட புத்தகம் வழங்கப்படுகிறது.தமிழகத்தில் கணினி அறிவியல் படித்து, பி.எட். முடித்துள்ள 60 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களை அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பயிற்றுநராக நியமனம் செய்ய த.வெ.க. அரசாவது முன்வர வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நன்றி :கோவை தினமலர் மற்றும் ஆசிரியர் அவர்களுக்கு
No comments:
Post a Comment