ங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மேலடுக்கு சுழற்சியாக மாறி உள்ளதால், அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார். வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மழை நீடிக்கும் :
காற்றழுத்த தாழ்வு நிலை மேலடுக்கு சுழற்சியாக மாறி உள்ளது. இந்த மேலடுக்கு சுழற்சி கேரளாவுக்கு அருகே நிலை கொண்டுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தை பொருத்த வரை தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும். வட மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். விட்டு விட்டு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நிரம்பும் ஏரிகள் :
தமிழகம் முழுவதும் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அணைகள் பலவும் நிரம்பி வருவதால் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment