அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, November 19, 2015

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும்

வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்ததுசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் ஒரே நாளில் அளவுக்கு அதிகமாக மழை கொட்டி கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திரா நோக்கி நகர்ந்ததால் மழை குறைந்தது.இதற்கிடையே தென் கிழக்கு அரபிக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:–தமிழகத்தில் நிலவி வந்த மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி மேற்கு நோக்கி நகர்ந்து லட்சத்தீவு அருகே நிலை கொண்டுள்ளது.

தமிழகம் – புதுவையில் நாளையும், நாளை மறுநாளும் 2 நாட்களுக்கு மழை இருக்கும். 21–ந்தேதி காலை முதல் 22–ந்தேதி காலை 8.30 மணி வரை மழை இருக்காது. அதன் பிறகு 22–ந்தேதி காலை 8.30 மணி முதல் 24–ந்தேதி காலை 8.30 மணி வரை 2 நாட்களுக்கு பலத்த மழை இருக்கும் என்றும் வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment