முதல் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்துக்கள் அறிமுகம் , பயிற்சி, மதிப்பீட்டிற்கான சிறந்த செயலி: ஆசிரியர் திரு செல்வக்குமார் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, July 11, 2020

முதல் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்துக்கள் அறிமுகம் , பயிற்சி, மதிப்பீட்டிற்கான சிறந்த செயலி: ஆசிரியர் திரு செல்வக்குமார்


முதல் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்துக்கள் அறிமுகம் , பயிற்சி, மதிப்பீட்டிற்கான சிறந்த செயலி: ஆசிரியர் திரு செல்வக்குமார்

முதல்வகுப்பு மாணவர்களுக்கு எழுத்துக்கள் அறிமுகம்,பயிற்சி,மதிப்பீட்டுக்கான செயலி
முதல் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும்
ஆங்கில எழுத்துக்களை
1 . எளிதாக அறிமுகப்படுத்துதல்,
2 . மீண்டும் மீண்டும் பயிற்சி அளித்தல்,
3 . அடையாளம் காணச்செய்து மதிப்பிடுதல்,
ஆகியவற்றுக்கான பயிற்சி அட்டைகள்
இச்செயலியில் உள்ளன.
வரிசையாகச் சொல்லும் போது
எழுத்துக்களைச் சரியாக கூறும்
குழந்தைகள், தனியாக ஒரு எழுத்தை
அடையாளம் காண்பதில்
சிரமப்படுகின்றனர். இச்செயலியில், எழுத்து
அட்டைகளைப் பயன்படுத்தி வரிசைமுறை
அல்லாது மாற்றிமாற்றி எழுத்துக்களை
அடையாளம் கண்டு உச்சரிக்க
வாய்ப்பளிக்கப் படுகிறது. அதனால் எழுத்து வடிவங்கள் குழந்தைகளின் மனதில்
நிலைநிறுத்தப்படுவது எளிமை
ஆக்கப்படுகிறது.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சிறுசிறு
சொற்களை தாமாகவே
படித்துப்பார்ப்பதற்கு வாய்ப்பளிக்கும்
வகையிலான அட்டைகள் இச்செயலியில்
உள்ளன.
கணக்கில் எண்களை
1 . எளிதாக அறிமுகப்படுத்துதல்,
2 . மீண்டும் மீண்டும் பயிற்சி அளித்தல்,
3 . அடையாளம் காணச்செய்து மதிப்பிடுதல்,
ஆகியவற்றுக்கான அட்டைகள்
இச்செயலியில் உள்ளன.
மேலும் அடிப்படை செயல்பாடுகளான ஓர்
இலக்க கூட்டல், கழித்தலுக்கான பயிற்சி
அட்டைகளும் மற்றும் பெருக்கல்
வாய்ப்பாட்டிற்கான பயிற்சி அட்டைகளும்
உள்ளன.
முதல் வகுப்பு  ஆசிரியர்களுக்கு
எழுத்துக்களையும் எண்களையும் கற்பிக்க
இந்த  செயலி மிகவும் பயனுள்ளதாக
இருக்கின்றது.
நமது நண்பர் திருப்பனந்தாள் ஒன்றியம், மேலவெளி ஊ.ஒ.தொ.பள்ளி ஆசிரியர், திரு. செல்வக்குமார் அவர்களின் அயராத உழைப்பில் உருவான App. கொரானா விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்க மாணவர்களின் பெற்றோர்களுக்கு அனுப்பலாம். ஆசிரியர்கள் பள்ளியில் பயன்படுத்த சிறந்த App.
நம் தொடக்கப்பள்ளி ஆசிரியரின் உழைப்பை மதித்து பாராட்டுவோம் பகிர்வோம்.

No comments:

Post a Comment