144 தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வித்துறையில் ஏராளமான காலி பணியிடங்கள் உள்ளது. இதனை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆசிரியர்கள் பணிநியமனம் தொடர்பாக விதிமுறைகளும் உருவாக்கப்பட்டது.
இந்தநிலையில் முதற்கட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப கோப்புகள் தயாரிக்கப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்தார்.
145 ஆசிரியர் பணியிடம்
இந்தநிலையில் புதுவை பள்ளிக்கல்வித்துறையில் காரைக்கால் மற்றும் மாகியில் காலியாக உள்ள 145 அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment