புதிய ஓய்வூதிய திட்டம் அமலாகும் வரை அடிப்படை ஊதியத்தில் 30% இடைக்கால நிவாரணம்
டேப்ஸ்’ ஓய்வூதிய திட்ட இறுதி விதிமுறைகள் வெளியிடப்படும் வரை, கடந்த ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு மட்டும் அடிப்படை சம்பளத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10 ஆயிரம் - இதில் எது அதிகமோ அத்தொகை இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்’ (Tamil Nadu Assured Pension Scheme - TAPS) என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தார். அதன்படி, அரசு ஊழியர்கள் இறுதியாகப் பெற்ற அடிப்படை சம்பளத்தில் 50 சதவீத தொகையுடன் நடைமுறையில் உள்ள அகவிலைப்படி சேர்த்து ஓய்வூதியமாக வழங்கப்படும். பணிக்கொடை அதிகபட்சம் ரூ.25 லட்சம் வழங்கப்படும்.
இது தொடர்பான அரசாணை கடந்த ஜனவரி 9-ம் தேதி வெளியிடப்பட்டது. டேப்ஸ் ஓய்வூதிய திட்டம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு அதன்பிறகு இத்திட்டம் நிறைவேற்றப்படும் அரசு அறிவித்திருந்தது.
இந்தச் சூழலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு கடந்த மே 10-ம் தேதி பொறுப்பேற்றது. தவெக தனது தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. எனவே, தவெக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இருந்து வருகின்றனர்.

No comments:
Post a Comment