மாணவர் நலனைக் காப்பாற்றுங்கள்.. அமைச்சரிடம் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை.. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, June 5, 2026

மாணவர் நலனைக் காப்பாற்றுங்கள்.. அமைச்சரிடம் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை..

மாணவர் நலனைக் காப்பாற்றுங்கள்.. அமைச்சரிடம் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை..


சென்னை: தமிழ்நாடு வேலையில்லா கணினி ஆசிரியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், சென்னை தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஆகியோரை நேரில் சந்தித்து கணினி ஆசிரியர்களின் கோரிக்கையை மனுவாக அளித்தனர். 


இதுதொடர்பாக தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:



மத்திய அரசு சமக்ர சிக்க்ஷா ‌ICT (information communication technology) திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நவீன கணினி ஆய்வகங்கள் அமைக்கவும் அதற்கு கணினி பயிற்றுநர்களை நியமிக்க (administrator cum instructor ) செய்யவும் நிதி வழங்குகின்றது. 



கணினி அறிவியல் பாடத்தை 6 முதல் 10ம் வகுப்பு வரை தனி பாடமாக கொண்டு வர வேண்டும். மற்ற பாடங்களைப் போன்று கணினி அறிவியல் பாடத்திற்கும் பாட வேளைகள் ஒதுக்கி தந்து தனி பாடமாகவும் , செய்முறையாகவும் கற்றுக் கொடுக்க வேண்டும் மற்றும் ஆய்வகங்களை மேலாண்மை செய்ய வேண்டும்.இதற்கு ஒரு கணினி ஆய்வகம் அமைக்க ரூபாய் 6.40 லட்சம், ஒரு கணினி பயிற்றுநர் நியமிப்பதற்கு ரூபாய் ஒரு லட்சத்து 80 ஆயிரம் மத்திய அரசு வழங்குகிறது.



அதன் அடிப்படையில் மேல்நிலைப் பள்ளிகளில் 20 கணினிகளும் உயர்நிலைப் பள்ளிகளில் 10 கணினிகளும் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தற்போது தான் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மேல்நிலை உயர்நிலைப் பள்ளிகளில்6454 பணியிடங்களுக்கும், நடுநிலைப் பள்ளிகளில் 8209 பணியிடங்களுக்கும் மொத்தம் 14663 கணினி பயிற்றுநர்களை நியமிக்க மாதம் ரூபாய் 15,000 நிதி வழங்குகிறது.அரசு உயர்நிலை மேல்நிலைப் செயல்பாட்டில் இருக்கும் கணினி ஆய்வகங்களுக்கு கணினி பயிற்றுனர் நியமிக்கப்படவில்லை. அரசு நடுநிலைப் பள்ளிகளில் ஆய்வுகள் அமைப்பதற்கு முன் கணினி பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் கணினி பயிற்றுநர்கள் 9-10ம் வகுப்பிற்கு இதுவரை நியமிக்கப்படவில்லை.








8209 நடுநிலைப் பள்ளிகளில்(6-8) ஆய்வகங்கள் தொடங்குவதற்கு முன்பே கணினி பயிற்றுநர்கள் தனியார் நிறுவனத்தின் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர் இதில் 2% சதவீதம் பேர் கூட இந்த பணிக்கு தகுதி பெற்றவர்கள் அல்ல.தனியார் நிறுவனத்தின் மூலம் பெயருக்காக தேர்வு நடத்தி இல்லம் தேடி தன்னார்வலர்களை தேர்வு செய்துள்ளது..


வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014

No comments:

Post a Comment