கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறும் ஆசிரியர்களுக்கு ஜாமினில் விலக்கு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, June 7, 2026

கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறும் ஆசிரியர்களுக்கு ஜாமினில் விலக்கு

கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறும் ஆசிரியர்களுக்கு ஜாமினில் விலக்கு

விதியில் திருத்தம் செய்ய வலியுறுத்தல்
அனைத்திந்திய ஆசிரியர் அரசு வழங்கும் சம் பேரவை சட்ட செயலாளர்  ஆசிரியர் பாலமுருகபாண்டியன்  கூறியதாவது

கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கங்களில் கடன் பெறும் ஆசிரியர்களுக்கு ஜாமின் கேட்பதில் விலக்கு அளிக்கும் வகையில் விதியில் திருத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆண்டிற்கு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களில் கடன் பெற்று வருகின்றனர். இச்சங்கத்தில் ரூ.15 லட்சம் வரை கடன் பெறும் வசதி உள்ளது. கடன் பெறும் போது ஆசிரியர்களுக்கு ஜாமின் கேட்கும் முறை பல ஆண்டுகளாக தொடர்கிறது. ஆசிரியர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரியி டம் முறைப்படி அனுமதி பெறுகிறார்.

 அரசு வழங்கும் சம்பளம் ஆசிரியர்களுக்கு  செல்வதற்கு முன்பே கடனுக்கான தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இந்நிலையில் தேவையின்றி ஜாமின் கேட்பது மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது. கூட்டுறவு சங் கங்களில் உறுப்பினராக உள்ளவர்கள் தான் அதன் உரிமையாளர் ஆவர். அவர்கள் கடன் பெற விரும்பும் போது ஜாமின் வழங்குபவர்களையும் அவர்களே அழைத்து வர வேண்டும் என்ற நிபந்தனை தேவையில்லாதது.

இதுபோன்ற நிபந்தனையால்  அவசர காலத்தில் கடன் பெற முடியவில்லை.  ஆசிரியர்களிடம் கடன் பெறும் போது ஜாமின் கேட்பதில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் கூட்டுறவுச் சங்க விதிகளில் திருத்தம் மேற்கொள்ளதமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment