இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனம், டில்லி தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவருக்கு, ரூ. 1.27 கோடி சம்பளம் கொடுக்க முன்வந்துள்ளது.
டில்லி தொழில்நுட்ப பல்கலைக்கழக்ததில், இன்பர்மேசன் டெக்னாலஜி இறுதியாண்டு படிக்கும் மாணவர் சேத்தன் கக்கார். இவர் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டுள்ளார். படிப்பு முடிந்ததும் சேத்தன், கூகுள் நிறுவன பணிக்காக கலிபோர்னியா செல்ல உள்ளார்.
கூகுள் நிறுவனத்தில் பணிவாய்ப்பு கிடைத்துள்ளதன் மூலம், தனது லட்சிய கனவு நிறைவேறியுள்ளதாக சேத்தன் கக்கார் கூறியுள்ளார்.
கூகுள் நிறுவனத்தால், இதற்கு முன் நியமனம் செய்யப்பட்ட டில்லி மாணவருக்கு ரூ. 93 லட்சம் சம்பளமாக தரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment