தமிழகத்தில் மழை தொடர்ந்து பெய்து அங்கங்கு தண்ணீர் தேங்கிக் கிடப்பதால், மக்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என்று தமிழக அரசு இன்று கூடுதலாக 416 நடமாடும் மருத்துவமனைகளைத் தொடங்கி உள்ளது. ஏற்கனவே தமிழகம் முழுவதும் நடமாடும் மருத்துவமனைகள் இயங்கி வரும் நிலையில் இது போதாது என்று மேலும் 416 நடமாடும் மருத்துவமனைகளை இன்று தமிழக அரசு துவக்கி வைத்து அதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சேவையை தொடங்கி உள்ளது.
தவிர 770 சுகாதார மையங்களையும் துவக்கி வைத்துள்ளது. இதில் மருத்துவ ஆலோசனைகளை வழங்க செவிலியர்கள், அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் மட்டும் 30 சுகாதார மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சென்னை எழும்பூரில் நடமாடும் மருத்துவமனையை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் திறந்து வைத்தார்.
No comments:
Post a Comment