அரசு பள்ளிகளில், ஆங்கில ஆசிரியர்களுக்கு
பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழ் மற்றும்
அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வுக்கு
காத்திருக்கின்றனர். அரசு பள்ளிகளில் உள்ள
இடைநிலை, உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்களில்
பட்டப்படிப்பு முடித்தவருக்கு, பதவி உயர்வு வழங்கும்
கலந்தாய்வு, நேற்று நடந்தது.
இதில், 400 பேருக்கு, பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இந்த பதவி உயர்வில் தமிழ், அறிவியல் மற்றும்
கணிதத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு, போதிய
காலியிடம் இல்லை. நேற்றைய கலந்தாய்வில், 1989ல்
பணியில் சேர்ந்த, அறிவியல் பட்டதாரிகளுக்கே பதவி
உயர்வு பரிசீலிக்கப்பட்டது.
தமிழ் பாடத்தில், 2001; கணிதம், 2002; வரலாறு,
2006ல் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு
வழங்கப்பட்டது. ஆங்கிலத்தில் மட்டும், 2014ல்
பணியில் சேர்ந்தவர்களுக்கு கூட, பதவி உயர்வு
கிடைத்தது.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறும்போது, 'தமிழ்,
அறிவியல், வரலாறு பாடங்களில் காலியிட
எண்ணிக்கையை விட, அதில் பட்டம் பெற்ற
ஆசிரியர் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக
உள்ளது. இடைநிலை, உடற்கல்வி மற்றும்
சிறப்பாசிரியர்கள், ஆங்கில பட்டப்படிப்பு
முடிக்காததால், அவர்களால், பதவி உயர்வு
பெற முடியவில்லை' என்றனர்.
Sunday, November 1, 2015
New
ஆங்கில ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் கிராக்கி
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment