அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, November 20, 2015

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும்

லட்சத்தீவில் நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது குறித்து சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன்,

"மேலடுக்கு சுழற்சியானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி லட்சத்தீவு அருகே நிலை கொண்டுள்ளது.இதனால், தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்யும். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அதேவேளையில் தெற்கு ஆந்திராவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மறைந்துவிட்டது" என்றார்.

No comments:

Post a Comment