ஸ்ரீராம் திருக்குறள் இலக்கியக்கழகத்தின் சார்பாக மாநில அளவிலான திருக்குறள் பேச்சுப்போட்டி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, October 11, 2018

ஸ்ரீராம் திருக்குறள் இலக்கியக்கழகத்தின் சார்பாக மாநில அளவிலான திருக்குறள் பேச்சுப்போட்டி

ஸ்ரீராம் திருக்குறள் இலக்கியக்கழகத்தின் சார்பாக
மாநில அளவிலான திருக்குறள் பேச்சுப்போட்டி சென்னையில் 06/10/2018 அன்று நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் 10 மையங்களிலிருந்து முதலிடம் பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றனர்.
தமிழ்நாடு முழுவதும் 1069 மாணவர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இறுதிப்போட்டியில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கல்கடம்பூர் மலைப்பகுதியைச்சார்ந்த அரசு மேனிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு  மாணவி கு.ஜெயந்தி மூன்றாம் பரிசுக்கான கேடயமும் ரொக்கப்பரிசு ரூ.5000 பெற்றார்.
இத்துடன் ரூ.3333 மதிப்பிலான புத்தகங்கள் பள்ளிக்கு பரிசாக வழங்கப்பட்டன.
வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவியை அனைவரும் பாராட்டினார்கள்.
இப்போட்டியை மக்கள் தொலைக்காட்சி நவம்பர் மாதத்தின் வாரங்களில் ஒளிபரப்ப உள்ளது..
நன்றி
அரசு மேனிலைப் பள்ளி
கல்கடம்பூர்
சத்தியமங்கலம்
ஈரோடு மாவட்டம்.
9944153366


மாநில அளவிலான திருக்குறள் பேச்சுப்போட்டியில் மூன்றாமிடம் பெற்ற ஈரோடு மாவட்டம் கல்கடம்பூர் அரசுப்பள்ளி மாணவி

No comments:

Post a Comment