ரயில் பயணிகளுக்கு வேற லெவல் சலுகை.. இப்படியும் ஒரு வசதி இருக்கா? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, August 5, 2022

ரயில் பயணிகளுக்கு வேற லெவல் சலுகை.. இப்படியும் ஒரு வசதி இருக்கா?

ரயில் பயணிகளுக்கு வேற லெவல் சலுகை.. இப்படியும் ஒரு வசதி இருக்கா?
நீங்கள் ரயில் பெட்டியையும், போர்டிங் ஸ்டேஷனையும் இலவசமாக மாற்றிக் கொள்ளலாம். ரயிலையே கூட நீங்கள் மாற்ற முடியும். அது எப்படி என்று இங்கே பாருங்கள்..!
நாட்டின் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். ரயில்களில் டிக்கெட் செலவு குறைவு என்பதோடு சௌகரியமாகவும் பயணிக்கலாம். இதற்காகவே இந்திய ரயில்வே தனது பயணிகளின் வசதிக்காக பல இலவச சேவைகளை வழங்குகிறது. சில இலவச சேவைகள் பற்றிப் பயணிகளுக்கே தெரிவதில்லை.
டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பயணிகளுக்கு பெட்டிகளை மாற்றும் (கோச்) வசதியை இந்திய ரயில்வே வழங்குகிறது. அதாவது ஸ்லீப்பர் கோச்சில் முன்பதிவு செய்த பயணிகள் 3வது ஏசி கிளாஸ் (ஏசி 3 டயர்) மற்றும் 3வது ஏசி கிளாஸ் பயணிகள் 2வது ஏசி கிளாஸ் (ஏசி 2 டயர்) பெறலாம். 2ஆவது ஏசி வகுப்பு பயணிகள் அதே கட்டணத்தில் முதல் ஏசி வசதியைப் பெறலாம்.
இந்த வசதியைப் பெற, பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது 'auto upgrade' விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, இருக்கைகள் இருக்கும் அளவைப் பொறுத்து பயணிகளுக்கு சீட் அப்கிரேட் வசதி வழங்கப்படும். இதனால் ஒவ்வொரு முறையும் டிக்கெட்டை புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
ரயில் பயணிகள் இருக்கை கிடைப்பதற்ககாக வேறு ரயிலுக்கு மாறும் வசதியும் உள்ளது. காத்திருப்புப் பட்டியல் அடிப்படையில் மற்றொரு ரயிலில் பயணிக்க அனுமதிக்கிறது. இதற்காக ரயில்வே 'விகல்ப் சேவா' வசதியைத் தொடங்கியுள்ளது. உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டைப் பெற முடியாத பயணிகள் வேறு ரயிலில் இருக்கையைப் பெறலாம். இதற்கு, டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, 'விகல்ப் ஆப்ஷன்' தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு இந்த வசதியை ரயில்வே உங்களுக்கு வழங்கும்.
இந்திய ரயில்வே தனது பயணிகளுக்கு டிக்கெட்டுகளை மாற்றுவதற்கான விருப்பத்தையும் வழங்குகிறது. புக்கிங் செய்த ஒருவரால் சில காரணங்களால் பயணம் செய்ய முடியாவிட்டால் அவர் தனது குடும்பத்தில் உள்ள எந்த உறுப்பினரின் பெயரிலும் டிக்கெட்டை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் பயண நாளுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பே டிக்கெட்டை மாற்ற வேண்டும்.
இந்த வசதியின் கீழ் தாய், தந்தை, சகோதரி, மகன், மகள், கணவன் மற்றும் மனைவி பெயரில் மட்டுமே டிக்கெட்டுகளை மாற்ற முடியும். இதற்கு டிக்கெட் பிரிண்ட் எடுத்து அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும். டிக்கெட் வைத்திருப்பவரின் அடையாளச் சான்று மூலம் டிக்கெட்டுகளை மாற்றலாம். இருப்பினும், டிக்கெட்டுகள் ஒரு முறை மட்டுமே மாற்றப்படும்.
டிக்கெட் பரிமாற்றம் வசதியைப் போலவே ரயில் ஏறும் போர்டிங் ஸ்டேஷனையும் மாற்றும் வசதி உள்ளது. இதற்கும் 24 மணி நேரத்திற்கு முன்பே மாற்றப்பட வேண்டும். உதாரணமாக ஒரு பயணி எக்மோரில் இருந்து டிக்கெட் முன்பதிவு செய்து, அந்த ரயில் பாதையில் உள்ள வேறு எந்த நிலையத்திலிருந்தும் ஏற விரும்பினால், அவர் தனது நிலையத்தை மாற்றிக்கொள்ளலாம்.
போர்டிங் ஸ்டேஷன் மாற்றத்தை ஆன்லைனில் செய்யலாம். IRCTC இணையதளம் அல்லது ஆப்பில் உள்நுழைந்த பிறகு, முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் ஹிஸ்ட்ரிக்குச் சென்று போர்டிங் நிலையத்தை மாற்றலாம். ஆனால் இந்த வசதி ஒருமுறை மட்டுமே கிடைக்கும். ஒருமுறை நிலையம் மாற்றப்பட்டால் முன்பு பதிவு செய்யப்பட்ட நிலையத்தில் சென்று ரயில் ஏற முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment