TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, February 29, 2016

தேசிய தொழில்நுட்ப ஆசிரியருக்கான விருது: தேனாடு ஊராட்சி பள்ளி ஆசிரியர் தேர்வு

தேசிய தொழில்நுட்ப ஆசிரியருக்கான விருது: தேனாடு ஊராட்சி பள்ளி ஆசிரியர் தேர்வு

February 29, 2016 0 Comments
தேசிய அளவில் சிறந்த தொழில்நுட்ப ஆசிரியராக, கோத்தகிரி தேனாடு ஊராட்சிபள்ளி ஆசிரியர்தர்மராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.நாட்டின் மிகப்பெரிய தகவல...
Read More

Sunday, February 28, 2016

நிலையான படையினர், தேர்வு மையத்தில், ஒவ்வொரு தேர்வு அறைக்கும் திடீரென சென்று சோதனையிடுவர்; பறக்கும் படையினர் பல தேர்வு மையங்களுக்கு, திடீரென சென்று
சோதனையிடுவர்.நிலையான படைக்கும், பறக்கும் படைக்கும், ஏற்கனவே தேர்வுப்பணி அனுபவம் பெற்ற ஆசிரியர்களே நியமிக்கப்படுவர். 'ஐந்து ஆண்டுகளுக்கு குறைவாக ஆசிரியர் பணி அனுபவம் இல்லாதவர்களை தேர்வு பணிக்கு அமர்த்தக்கூடாது' என, தேர்வு விதிமுறைகள் உள்ளன.
ஆனால், பிளஸ் 2 பொதுத்தேர்வில் பறக்கும் படை அமைக்க ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, நிலைமையை சமாளிக்க, பணியில் சேர்ந்து, ஓர் ஆண்டு கூட ஆகாத ஆசிரியர்களையும் பறக்கும் படை மற்றும் தேர்வு
கண்காணிப்பு பணிகளில் அமர்த்தியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அனுபவமிக்க ஆசிரியர் பலர் தேர்வு பணிக்கு முழுக்கு போட்டு விட்டனர்; சில ஆசிரியர்களுக்கு, வேண்டும் என்றே அதிகாரிகள் சிலர், தேர்வு பணி கொடுக்க வில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.


பணி அனுபவம் இல்லாத ஆசிரியர்கள் மற்றும் தனியார் ஆசிரியர்கள் பறக்கும் படையில் இடம் பெறும் போது, அவர்களால் சரியாக, கண்காணிப்பு பணியை மேற்கொள்ள முடியாது. மாணவர்களின் கவனம் சிதறும் வகையில் சோதனையில் ஈடுபட்டால், அது பிற மாணவர்களை பாதிக்கும். ஏதாவது, ஒரு அறையில், பறக்கும் படையிடம், காப்பியடித்த மாணவர் பிடிபட்டால், அந்த அறையில் உள்ள கண்காணிப்பாளரிடம் விளக்கம் கேட்க வேண்டும். ஆனால், கண்காணிப்பாளராக உள்ள சீனியர் ஆசிரியரிடம், அனுபவமில்லாத பறக்கும் படை ஆசிரியர் விளக்கம் கேட்க முடியாத நிலை ஏற்படும். மொத்தத்தில் தேர்வுத்துறையின் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை.ஆசிரியர்கள்


அத்தாட்சி சான்றிதழ் பெற உத்தரவு

-பிளஸ் 2 தேர்வில் முறைகேடுகளை தடுக்க, வினாத்தாள் கட்டுகளை மாணவர்கள் முன்னிலையில் பிரிப்பதுடன், அதற்கான அத்தாட்சி சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில், ஒரு சில தனியார் பள்ளி தேர்வு மையங்களில், தேர்வுக்கு முன்னதாகவே, வினாத்தாள் கட்டுகளை பிரித்து, மாணவர்களுக்கு கற்றுக்
கொடுப்பதாக, குற்றச்சாட்டு இருந்து வந்தது.இதை தடுக்க, நடப்பு கல்வியாண்டில், வினாத்தாள் கட்டுகளை, அனைத்து மாணவர் முன்னிலையில், தேர்வு துவங்கும் முன் தான் பிரிக்க வேண்டும் என,
உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வினாத்தாள் கட்டு பிரிக்கப்படாமல் இருந்ததற்கான அத்தாட்சி சான்றிதழ்களை, மாணவர்களிடம் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், தேர்வறை கண்காணிப்பாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு நாளன்று காலை, 9:45 மணிக்கு, மாணவர், தன் ஹால்டிக்கெட்டை காண்பித்து, தேர்வறைக்குள் செல்ல வேண்டும். 9:50 மணிக்கு, சிறப்பு அறிவிப்புகளை கண்காணிப்பாளர் அறிவிக்க வேண்டும். 9:55 மணிக்கு, வினாத்தாள் கட்டு பிரிக்கப்படாமல் இருப்பதை காண்பித்து, இருவரிடம் அத்தாட்சி சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின், வினாத்தாள்
கட்டினை பிரிக்க வேண்டும். காலை, 10:00 மணிக்கு, மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்படும். 10:10 மணிக்கு விடைத்தாள் வழங்கப்பட்டு, முகப்பு சீட்டில் உள்ள விவரங்கள்
சரிபார்க்கப்படும். 10:15 மணி முதல், மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்கலாம்.ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும், ஒரு மணி அடித்த பின் மதியம், 1:10 மணிக்கு எச்சரிக்கை மணி அடிக்க வேண்டும். 1.15 மணிக்கு, விடைத்தாள்களை பெற்றுக்கொண்டு, மாணவர்களை அமைதியாக வெளியேற அனுமதிக்க வேண்டும். இவ்வாறு தேர்வறை கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நிலையான படையினர், தேர்வு மையத்தில், ஒவ்வொரு தேர்வு அறைக்கும் திடீரென சென்று சோதனையிடுவர்; பறக்கும் படையினர் பல தேர்வு மையங்களுக்கு, திடீரென சென்று சோதனையிடுவர்.நிலையான படைக்கும், பறக்கும் படைக்கும், ஏற்கனவே தேர்வுப்பணி அனுபவம் பெற்ற ஆசிரியர்களே நியமிக்கப்படுவர். 'ஐந்து ஆண்டுகளுக்கு குறைவாக ஆசிரியர் பணி அனுபவம் இல்லாதவர்களை தேர்வு பணிக்கு அமர்த்தக்கூடாது' என, தேர்வு விதிமுறைகள் உள்ளன. ஆனால், பிளஸ் 2 பொதுத்தேர்வில் பறக்கும் படை அமைக்க ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, நிலைமையை சமாளிக்க, பணியில் சேர்ந்து, ஓர் ஆண்டு கூட ஆகாத ஆசிரியர்களையும் பறக்கும் படை மற்றும் தேர்வு கண்காணிப்பு பணிகளில் அமர்த்தியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அனுபவமிக்க ஆசிரியர் பலர் தேர்வு பணிக்கு முழுக்கு போட்டு விட்டனர்; சில ஆசிரியர்களுக்கு, வேண்டும் என்றே அதிகாரிகள் சிலர், தேர்வு பணி கொடுக்க வில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. பணி அனுபவம் இல்லாத ஆசிரியர்கள் மற்றும் தனியார் ஆசிரியர்கள் பறக்கும் படையில் இடம் பெறும் போது, அவர்களால் சரியாக, கண்காணிப்பு பணியை மேற்கொள்ள முடியாது. மாணவர்களின் கவனம் சிதறும் வகையில் சோதனையில் ஈடுபட்டால், அது பிற மாணவர்களை பாதிக்கும். ஏதாவது, ஒரு அறையில், பறக்கும் படையிடம், காப்பியடித்த மாணவர் பிடிபட்டால், அந்த அறையில் உள்ள கண்காணிப்பாளரிடம் விளக்கம் கேட்க வேண்டும். ஆனால், கண்காணிப்பாளராக உள்ள சீனியர் ஆசிரியரிடம், அனுபவமில்லாத பறக்கும் படை ஆசிரியர் விளக்கம் கேட்க முடியாத நிலை ஏற்படும். மொத்தத்தில் தேர்வுத்துறையின் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை.ஆசிரியர்கள் அத்தாட்சி சான்றிதழ் பெற உத்தரவு -பிளஸ் 2 தேர்வில் முறைகேடுகளை தடுக்க, வினாத்தாள் கட்டுகளை மாணவர்கள் முன்னிலையில் பிரிப்பதுடன், அதற்கான அத்தாட்சி சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில், ஒரு சில தனியார் பள்ளி தேர்வு மையங்களில், தேர்வுக்கு முன்னதாகவே, வினாத்தாள் கட்டுகளை பிரித்து, மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதாக, குற்றச்சாட்டு இருந்து வந்தது.இதை தடுக்க, நடப்பு கல்வியாண்டில், வினாத்தாள் கட்டுகளை, அனைத்து மாணவர் முன்னிலையில், தேர்வு துவங்கும் முன் தான் பிரிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வினாத்தாள் கட்டு பிரிக்கப்படாமல் இருந்ததற்கான அத்தாட்சி சான்றிதழ்களை, மாணவர்களிடம் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், தேர்வறை கண்காணிப்பாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு நாளன்று காலை, 9:45 மணிக்கு, மாணவர், தன் ஹால்டிக்கெட்டை காண்பித்து, தேர்வறைக்குள் செல்ல வேண்டும். 9:50 மணிக்கு, சிறப்பு அறிவிப்புகளை கண்காணிப்பாளர் அறிவிக்க வேண்டும். 9:55 மணிக்கு, வினாத்தாள் கட்டு பிரிக்கப்படாமல் இருப்பதை காண்பித்து, இருவரிடம் அத்தாட்சி சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின், வினாத்தாள் கட்டினை பிரிக்க வேண்டும். காலை, 10:00 மணிக்கு, மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்படும். 10:10 மணிக்கு விடைத்தாள் வழங்கப்பட்டு, முகப்பு சீட்டில் உள்ள விவரங்கள் சரிபார்க்கப்படும். 10:15 மணி முதல், மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்கலாம்.ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும், ஒரு மணி அடித்த பின் மதியம், 1:10 மணிக்கு எச்சரிக்கை மணி அடிக்க வேண்டும். 1.15 மணிக்கு, விடைத்தாள்களை பெற்றுக்கொண்டு, மாணவர்களை அமைதியாக வெளியேற அனுமதிக்க வேண்டும். இவ்வாறு தேர்வறை கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

February 28, 2016 0 Comments
பிளஸ் 2 தேர்வில் முறைகேடா?15 வகை தண்டனை அறிவிப்பு இந்த ஆண்டு, பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 4ம் தேதியும்; 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், ...
Read More
7வது ஊதியக்குழுவில், இடைநிலை ஆசிரியர்களுக்கு,

7வது ஊதியக்குழுவில், இடைநிலை ஆசிரியர்களுக்கு,

February 28, 2016 0 Comments
7வது ஊதியக்குழுவில், இடைநிலை ஆசிரியர்களுக்கு, 1.86 வழங்கி ஊதியம் நிர்ணயம் செய்தால், Pay matrixன் படி, குறைந்தபட்ச ஊதியம் 29200, 9300+420...
Read More
சமத்து மாணவர்களுக்கு பரிசு மத்திய அமைச்சர் அறிவிப்பு

சமத்து மாணவர்களுக்கு பரிசு மத்திய அமைச்சர் அறிவிப்பு

February 28, 2016 0 Comments
மாணவியரிடம், ஒழுக்கத்துடனும், மரியாதையுடனும் நடந்து கொள்ளும் மாணவர்களை, பரிசளித்து கவுரவிக்க உள்ளதாக, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்...
Read More
கே.வி., மாணவர் சேர்க்கை மார்ச் 10 வரை அவகாசம்

கே.வி., மாணவர் சேர்க்கை மார்ச் 10 வரை அவகாசம்

February 28, 2016 0 Comments
தமிழகம் முழுவதும், கே.வி., எனப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, மார்ச், 10 வரை அவகாசம் தரப்பட்டு உள்ளத...
Read More
தனித்தேர்வர்களூக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 2016-  தேர்விற்கான கால அட்டவணை
TRB anounce exam for lecturer post
ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு எப்போது? தேர்வு எழுதிய 8 லட்சம் பேர் காத்திருப்பு...

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு எப்போது? தேர்வு எழுதிய 8 லட்சம் பேர் காத்திருப்பு...

February 28, 2016 0 Comments
ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு நடந்து முடிந்து, எட்டு மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாததால், தேர்வெழுதிய, ...
Read More
சேலம் பெரியார் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் தேர்வு முடிவுகள் வெளியீடு
23.08.2010 முன்பே சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 23.08.2010 பின்பு பணிநியமனம் பெற்ற ஆசிரியர்கள் Tet எழததேவையில்லை TRB விளக்கம்