பள்ளிக்கல்வி திட்டங்கள் ஆய்வுக்கு 38 கண்காணிப்பு அதிகாரிகள்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 30, 2023

பள்ளிக்கல்வி திட்டங்கள் ஆய்வுக்கு 38 கண்காணிப்பு அதிகாரிகள்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

பள்ளிக்கல்வி திட்டங்கள் ஆய்வுக்கு 38 கண்காணிப்பு அதிகாரிகள்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவுபள்ளிக்கல்வி நலத்திட்டங்களை ஆய்வுசெய்ய ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 
 
             இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச் செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: 
 
        பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களுக்கு பல்வேறு விதமான நலத்திட்டங்களும், அதேபோல், இல்லம் தேடிகல்வி, எண்ணும் எழுத்தும் உள்ளிட்ட புதிய திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.இத்திட்டங்கள் மூலம் ஏற்படும் விளைவுகளையும், கற்றல்-கற்பித்தல் நடைமுறைகளையும் உறுதிபடுத்தும் வகையில் நடப்பு கல்வி ஆண்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்காணிப்பு அதிகாரிகளை நியமிக்குமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 
 
            அதன்படி, பள்ளிக்கல்வி நலத்திட்டங்களை ஆய்வு செய்ய ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு கண்காணிப்பு அதிகாரி வீதம் 30 கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 
 
            இவ்வாறு அந்த அதில் கூறப்பட்டுள்ளது.இந்த கண்காணிப்பு அதிகாரிகளில் அர்ச்சனா பட்நாயக், க.இளம்பகவத், பி.வெங்கடபிரியா, எம்.ஆர்த்தி ஆகிய 4 பேர் ஐஏஎஸ் அதிகாரிகள். 11 பேர் இயக்குநர்கள். 15 பேர் இணை இயக்குநர்கள். 8 பேர் துணை இயக்குநர்கள் ஆவர். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு பணியை விரைவில் மேற்கொள்வர்.

No comments:

Post a Comment