பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் நாள்: 25-06-2024 கிழமை: செவ்வாய்க்கிழமை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, June 25, 2024

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் நாள்: 25-06-2024 கிழமை: செவ்வாய்க்கிழமை

*பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்* 

 *நாள்: 25-06-2024*
*கிழமை: செவ்வாய்க்கிழமை*

*திருக்குறள்:*

பால்: பொருட்பால்
அதிகாரம்:கல்லாமை

*குறள் எண்:401*

அரங்குஇன்றி வட்டுஆடி யற்றே நிரம்பிய
நூல் இன்றிக் கோட்டி கொளல்.

பொருள்: அறிவு நிரம்புவதற்குக் காரணமான நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசுதல்,
சூதாடும் அரங்கு
இழைக்காமல் வட்டுக்காயை உருட்டி ஆடினாற் போன்றது.

*பழமொழி :*

Humility often gains more than pride.

 அடக்கம் ஆயிரம் பொன் தரும்.

*இரண்டொழுக்க பண்புகள் :*

*மழைநீரே குடிநீருக்கு ஆதாரம் என்பதால் மழை நீரை சேமிப்பேன்.

*தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.

*பொன்மொழி :*

"உங்களின் நாளைய எதிர்காலம், இன்றைய செயல்களில் இருக்கிறது!"-----மகாத்மா காந்தி

*பொது அறிவு :*

1. இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது?  


விடை: வேளாண்மை     

2. மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?

விடை: ஆந்திரப்பிரதேசம்

*English words & meanings :*

 circumspect-மிகுந்த கவனத்துடன், 

cautions-எச்சரிக்கை

*வேளாண்மையும் வாழ்வும் :*

தேசிய பொருளாதாரத்திற்கு விவசாயம் மிகவும் முக்கியமானது. முதலாவதாக, விவசாயப் பொருட்களின் ஏற்றுமதியின் காரணமாக இது ஒரு நாட்டிற்கு அந்நியச் செலாவணியாக செயல்படுகிறது

*ஜூன் 25*

விஸ்வநாத் பிரதாப் சிங் (சூன் 25 1931 - நவம்பர் 27, 2008) இந்தியக் குடியரசின் 7 ஆவது இந்திய பிரதமர் ஆவார். இவர் வி. பி. சிங் என அறியப்படுபவர். டிசம்பர் 2, 1989 லிருந்து நவம்பர் 10 1990 வரை இவர் இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்தார்.

2023-இல் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங்குக்கு முழு உருவச் சிலை அமைக்கும் அறிவிப்பை தமிழ்நாட்டு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டார்.

வி. பி. சிங்கை "இந்தியத் தலைமை அமைச்சர்களிலேயே மிகவும் அரிதான தலைமை அமைச்சராக இருந்தவர்" எனப் புகழ்ந்தார் தமிழறிஞர் கி. குணத்தொகையன்

*நீதிக்கதை*

 எதற்கும் காலம் உண்டு

 குரங்கு ஒன்று மாமரத்தில் பறித்த பழத்தை சுவைத்தபடி தன்னுடைய இருப்பிடம் வந்தது.

 பழத்தின் கொட்டையை கீழே போட்ட போது யோசனை ஒன்று தோன்றியது.

 தன்னுடைய இருப்பிடத்தில் கொட்டையை மண்ணில் விதைத்து  மரமாக வளரச் செய்தால் மாம்பழங்கள் வந்த பின்பு இஷ்டத்திற்கு சாப்பிடலாமே என்று எண்ணியது. 

 பின்பு மாங்கொட்டையை மண்ணில்  விதைத்து தண்ணீர் விட்டது. குரங்கின் மனம் மாம்பழத்தை பறித்து உண்பதிலேயே இருந்ததே தவிர மரத்தை வளர்ப்பதில் இல்லை.

 தினமும் காலையில் வந்து மண்ணை பறித்து விதையை எடுத்து முளைவிட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு திரும்பவும் மண்ணில் விதைத்து விட்டு தண்ணீர் ஊற்றும்.

 தினமும் இப்படி எடுப்பதும் விதைப்பதுமாக இருந்தால்  விதை எப்படி முளைக்கும்?

 விதை முளை விடவே இல்லை

 ஒரு நாள் காலையில் எடுத்து பார்த்த குரங்கிற்கு கோபம் வந்து அந்த மாங்கொட்டையை காட்டிற்குள் வீசி எறிந்தது.

குரங்கின் ஆசை நியாயமானது என்றாலும் அதனுடைய அவசரம் நியாயமானது அல்ல .

 எந்த ஒரு செயலிலும் வெற்றி வேண்டுமானால், முயற்சியுடன் அதற்குரிய காலமும் அவசியம்

*இன்றைய செய்திகள்*

*25.06.2024*

* செவிலியர்களுக்கு ஜெர்மன், ஜப்பான் மொழி இலவசப் பயிற்சி: தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு.

* நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,000 கன அடியாக குறைப்பு.

* மத்திய அரசு ஊழியர்கள் காலை 9.15 மணிக்குள் அலுவலகம் வர வேண்டும்: தாமதமானால் அரை நாள் விடுப்பு என எச்சரிக்கை.

* 18-வது மக்களவையின் முதல் கூட்டம் நேற்று தொடக்கம்: புதிய எம்.பி.க்கள் பதவியேற்றனர்.

* எலான் மஸ்கின் நியூராலிங்க் நிறுவன  சிப்பினை ஹேக் செய்யலாம்- மூளையில் சிப் பொருத்திக் கொண்ட முதல் நபர் தகவல்.

* T-20:வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிராக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது மகிழ்ச்சி அளிப்பதாக தென் ஆப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.

* கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: அமெரிக்கா, உருகுவே அணிகள் வெற்றி.

*Today's Headlines*

* Free German and Japanese Language Training for Nurses: Tamil Nadu Govt special arrangement.

 * Continued decline in water level: Reduction of water release in Mettur dam to 1,000 cubic feet.

 * Central Government employees must reach office by 9.15 am. It will be considered as half day leave if they are late .

 * First session of 18th Lok Sabha begins yesterday: New MPs sworn in

 * Elon Musk's Neuralink company chip can be hacked - information by the first person with a chip implanted in the brain.

 * T-20: South African captain Aiden Markram says he is happy to advance to the semi-finals after winning against West Indies.

 * Copa America Football Series: USA, Uruguay team won the match.

No comments:

Post a Comment