12ஆம் வகுப்பு படித்தாலே வேலை உறுதி - செங்கோட்டையன் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, August 18, 2018

12ஆம் வகுப்பு படித்தாலே வேலை உறுதி - செங்கோட்டையன்

12ஆம் வகுப்பு படித்தாலே வேலை உறுதி என்ற வகையில் இனி பள்ளிக் கல்வியின் தரம் உயர்த்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் பேசிய செங்கோட்டையன், பொறியியல் படித்துவிட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளதாக தெரிவித்தார். ஆனால் இனிவரும் காலங்களில் பனிரெண்டாம் வகுப்பு படித்தாலே வேலை உறுதி என்ற நிலைக்கு கல்வித்தரம் உயர்த்தப்படும் என்றார். அதற்கு ஏற்ப அடுத்த ஆண்டு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய வகையான பாடங்கள் எடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும் அடுத்த ஆண்டிலிருந்து 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதிய சீருடைகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment