தமிழகத்தில் அரசு ஊழியர்கள் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும்: தமிழக அரசு அரசாணை வெளியீடு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, August 30, 2018

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும்: தமிழக அரசு அரசாணை வெளியீடு
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் அரசு ஊழியர்கள் பணி நேரத்தின்போது கட்டாயம் அடையாள அட்டையை அணிய வேண்டும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
அடையாள அட்டை குறித்து பணியாளர் மற்றும் சீர்திருத்தத்துறை செயலாளர் எஸ்.ஸ்வர்னா, அனைத்து அரசுத் துறை செயலாளர்கள், அரசுத் துறை தலைவர்கள், மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கடிதத்தில் அரசு ஊழியர்கள் அனைவரும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பணியின்போது கண்டிப்பாக அணிவதை அந்தந்த துறையின் தலைவர் உறுதி செய்ய வேண்டும் என்பதற்கான அறிவுரையை அவ்வப்போது அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 16.7.2018 அன்று அடையாள அட்டை குறித்து உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், தமிழக அரசின் அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் குறிப்பாக, பொதுமக்களிடம் நேரடியாக பணியாற்றும் ஊழியர்களுக்கு 60 நாட்களுக்குள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வழங்க வேண்டும் என்றும் அடையாள அட்டை அணிவது தொடர்பாக ஏற்கனவே அரசு விதி இருந்தால் அந்த விதியை மிகவும் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்றும் விதியை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
எனவே அரசு உத்தரவின்படி, ஆணையை பின்பற்றி அடையாள அட்டையை கண்டிப்பாக அனைத்து ஊழியரும் அணிய வேண்டும் என்றும் அவர்களுக்கு துறைத் தலைவர்கள் அல்லது மாவட்ட கலெக்டர்கள் அறிவுரை வழங்க வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment