தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் வேலூர், சேலம் உள்பட 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, November 22, 2018

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் வேலூர், சேலம் உள்பட 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் வேலூர், சேலம்,
விழுப்புரம், திருவண்ணாமலை, மதுரை மற்றும் தேனி ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யலாம் என சற்றுமுன் வநிலைமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்க கடலில் கடந்த 11 ஆம் தேதி உருவான கஜா புயலானது 5 நாட்கள் கழித்து இன்று தமிழகத்தின் கரையை கரையை கடந்தது. இன்று காலையில் நாகப்பட்டிணம் மாவட்டம் அதிராம்பட்டிணத்தை 111 கி.மீ வேகத்தில் புயல் தாக்கியது. தற்போது புயல் வலுவிழந்து கேரளா சென்றுள்ளது.
இந்நிலையில், இன்னும் 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வேலூர், சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, மதுரை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment