PF எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கு காலக்கெடு நீட்டிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, April 15, 2017

PF எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கு காலக்கெடு நீட்டிப்பு

பிஎப் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (இபிஎப்ஒ) தெரிவித்துள்ளது.
முன்னதாக இபிஎப்ஒ ஆணையம் பிஎப் எண்ணுடன் ஆதாரை இணைப் பதற்கு கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி வரை கால அவகாசம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஏப்ரல் மாதம் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இபிஎப்ஒ ஆணையம் தெரிவித் துள்ளது. அதுமட்டுமல்லாமல் 50 லட்சம் ஓய்வூதியதாரர்கள் தங்களது ஓய் வூதிய கணக்கை ஆதார் எண்ணுடன் இணைத்து டிஜிட்டல் லைப் சான்றிதழை ஒப்படைப்பதற்கான கால அவகாசமும் ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று பல முறை ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. லைப் சான்றிதழை டிஜிட்டலில் சமர்பிக்க முடியாத ஓய்வூதிய தாரர்கள் வங்கிகளின் சென்று சமர்பிக்கலாம் எனசமீபத்தில் இபிஎப்ஒ ஆணையம் உத்தர விட்டது. மேலும் டிஜிட்டலில் ஏன் சமர்பிக்கமுடியவில்லை என்பதற்கு காரணத்தை கூற வேண்டும் என்று கூறியிருந்தது.

No comments:

Post a Comment