இன்று முதல் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, April 25, 2017

இன்று முதல் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்

தமிழகம் முழுவதும் 4.5லட்சம் அரசு ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு
அழைப்பு விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 64 அரசு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அன்பரசு தெரிவித்துள்ளார்.
வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக மார்ச் 31-ம் தேதி அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இன்று தினம் விவசாயிகளை ஆதரித்து மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு எதிர்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், புதிய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களும் போராட்டத்தில் இறங்க உள்ளனர்.

No comments:

Post a Comment