தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம் குறைப்பு!!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, January 28, 2018

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம் குறைப்பு!!!

சென்னை: தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணங்கள் குறைக்கப்படுவதாக 
தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அனைத்து நிலைகளிலும் பஸ் கட்டணம் ரூ.1 குறைக்கப்பட்டது. மாநகர பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.4 ஆக இருக்கும்
அதிகரிப்பு
அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்பட்ட தொடர் நஷ்டம் காரணமாக கடந்த 6 வருடங்களுக்கு பிறகு கடந்த ஜன.,20 ம் தேதி முதல் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. மாணவர்களும் எதிர்க்கட்சியினரும் போராட்டம் நடத்தினர்.
பரிசீலனை:
இந்நிலையில் இன்று தேனியில் போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பஸ் கட்டண உயர்வை குறைப்பது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் எனக்கூறியிருந்தார்.
குறைப்பு:
ஓபிஎஸ் பேசிய சிறிது நேரத்திலேயே, உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை குறைப்பதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இன்று குறைக்கப்பட்ட பஸ் கட்டணத்தின்படி, சாதாரண பேருந்துகளில் கட்டணம் 60 பைசாவில் இருந்து 58 பைசாவாகவும், விரைவு பேருந்துகளில் 80 பைசாவில் இருந்து 75 பைசாவாகவும், சொகுசு பஸ்களில் 90 பைசாவிலிருந்து 85 பைசாவாகவும், அதிநவீன பஸ்களில் 110 பைசாவிலிருந்து 100 பைசாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நகர மற்றும் மாநகர பஸ்களில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.5 லிருந்து ரூ. 4 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து நிலைகளிலும் ரூ.1 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
சாதாரண பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.4 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.18 ஆக இருக்கும். சென்னை மாநகர பஸ்களில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.4 ஆகவும், அதிகபட்சமாக ரூ.22 ஆகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண பஸ்களில் 10 கிலோ மீட்டர் வரை பஸ் கட்டணம் ரூ.58 ஆகவும், புறவழிசாலை பஸ்களில் 30 கிலோ மீட்டர் வரை பஸ் கட்டணம் ரூ.85 ஆகவும் , விரைவு பஸ்களில் 30 கிலோ மீட்டர் வரை பஸ் கட்டணம் ரூ.75 ஆகவும், அதிசொகுசு இடைநில்லா பஸ்களில் 30 மீட்டர் வரை பஸ் கட்டணம் ரூ.85 ஆகவும், அதிநவீன சொகுசு பஸ்களில் 30 கிலோ மீட்டர் வரை பஸ் கட்டணம் ரூ.100 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண குறைப்பு நாளை (ஜன.,29) முதல் அமலுக்கு வரும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம் தற்போது குறைக்கப்பட்டுள்ளதால் நாள் ஒன்றிற்கு ரூ.4 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
x

No comments:

Post a Comment