இடைத்தரகர்கள் இன்றி, கலந்தாய்வு மூலம் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் மற்றும்பதவி உயர்வுவழங்கியதற்கு, புதுச்சேரி மாநில ஆசிரியர் கூட்டமைப்புநன்றி தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் செயலாளர் சீனிவாசன்விடுத்துள்ள அறிக்கை:பள்ளிக்
கல்வித் துறையில், ஆசிரியர் கூட்டமைப்புவலியுறுத்தியதால், புதிய மாற்றல்கொள்கை கடந்தஆண்டு அமலாக்கப்பட்டது. விரிவுரையாளர், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கலந்தாய்வு நடத்தி, மாற்றல் உத்தரவு வழங்கப்பட்டது.பட்டதாரி ஆசிரியர்களுக்குகலந்தாய்வு அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. வெளிப்படையான நிர்வாகத்தின் மூலம் கலந்தாய்வு நடந்ததால், இடைத்தரர்கள் தலையீடு மற்றும் மாற்றல்களுக்கு விலைபேசுவதுதவிர்க்கப்பட்டது.மாற்றுத் திறனாளிகள், மாற்று திறனாளிகளின்பெற்றோர் ஆசிரியர்கள், கணவர் இழந்தபெண் ஆசிரியைகள், தீராத நோய்கொண்ட ஆசிரியர்களுக்குமாற்றல் உத்தரவில்வகுத்த விதிகள்அமுல்படுத்தவில்லை. இதை தவிர்த்துகுறைகள் இன்றி, மாற்றல் உத்தரவு, பதவி உயர்வுவழங்கிய முதல்வர், கல்வி அமைச்சர், பள்ளி கல்விஇயக்குநர், இணை இயக்குநர் ஆகியோருக்கு நன்றிதெரிவித்து கொள்கிறோம்.பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கபள்ளி ஆசிரியர்கள், உடற் கல்விஆசிரியர், தொழில்நுட்பஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி, மாற்றல் மற்றும்பதவி உயர்வுவழங்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில்கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment