ரோம்:இத்தாலி நாட்டை சேர்ந்த உலகின் மிகவும் வயதான மூதாட்டி எம்மா மோரேனோ இவர் தனது 117-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார்.உலகின் மிகவும் வயதானவராக கருதப்படுபவர். இத்தாலி நாட்டை சேர்ந்த இவர், 1899-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி பிறந்த எம்மா, 19-ம் நூற்றாண்டில் பிறந்து, உயிர் வாழும் கடைசி நபர் இவரே.19, 20, 21 ஆகிய மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலியின் எம்மா மோரேனோவுக்கு நேற்று 117-வது பிறந்தநாள். பிறந்தநாளை முன்னிட்டு இத்தாலியின் வெர்பானியா பகுதியில் உள்ள அவரது சிறிய அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர்கள் முன்னிலையில் வெள்ளை நிற கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.இவ்வளவு நாள் உடல்நலத்துடன் வாழும் எம்மா, ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகளும் சில பிஸ்கட்டுகள் மட்டும் தான் சாப்பிடுகிறார்.
3 நுாற்றாண்டை கடந்த எம்மா
தனது வாழ்க்கையை பற்றி எம்மா கூறியதாவது:என்னுடைய வாழ்க்கை மிகவும் அற்புதமானது. நான் என்னுடைய 65-வது வயது வரை ஒரு தொழிற்சாலையில் வேலை செய்தேன். நான் 26 வயதாக இருந்த போது ஒருவன் என்னை மிரட்டி திருமணம் செய்து கொண்டார். எங்களுக்கு 1937-ம் ஆண்டு ஒரு குழந்தை பிறந்தது. அது பிறந்து 6 மாதங்களுக்குள் இறந்து விட்டது. இந்நிலையில் பல ஆண்டுகளாகவே தனியாக வாழ்ந்து வருகிறேன். நிறைய பேர் என்னைப் பார்க்க வந்து கொண்டே இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment