திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, November 30, 2016

திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம்

திரையரங்குகளில் திரைப்படம் தொடங்கும் முன்பு தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு
பிறப்பித்துள்ளது.
          தேசிய கீதம் இசைக்கப்படும் போது, திரையரங்கின் திரையில் தேசியக் கொடி காட்டப்பட வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மத்திய அரசும் ஒப்புக் கொண்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள திரையரங்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திரையரங்கில் தேசிய கீதம் இசைக்கும் போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தொடர்பாக மாநிலங்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

No comments:

Post a Comment