வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பெரியதாமல் செருவு ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில பாடத்தில் உள்ள Five Detectives பாடத்தில் வரக்கூடிய ஊட்டி மலை கிராமத்தை சார்ந்த பாடம் என்பதால்....
இன்று நீலகிரி பாக்கியநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களோடு நேரடியாக WhatsApp call ல் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு அவர்களின் வாழ்க்கை நிலை மற்றும் அவர்களின் இன்றைய காலநிலை மற்றும் பள்ளி அமைந்துள்ள சூழல் ஆகியவற்றை நேரடியாக கண்டு மகிழ்ந்தனர்....
இவ்வாய்ப்பினை எங்களுக்கு வழங்கிய எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி அவர்களுக்கும் மற்றும் அக்கா வசந்தா தலைமை ஆசிரியர் மற்றும் அப்பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பாக்கிய நகர்) அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்கள் பள்ளி மாணவர்கள் மிகவும் பின்தங்கிய கிராம சூழலில் வாழ்வதால் அவர்கள் ஊட்டி செல்வதற்கான வாய்ப்புகள் இல்லை.... என்பதால் இந்த நேரடி கற்றல் கற்பித்தல் மூலம் பகிர்ந்து கொண்டோம்.....
தேயிலை, கேரட், பீட்ரூட், கோஸ் பயிரிடுதல் உணவு முறைகள் அப்பள்ளியில் உள்ள சிறப்பு அம்சங்கள் மற்றும் வண்ண சுவர் படங்கள் என பல செய்திகள் பரிமாற்றம் செய்து கொண்டனர்.....
No comments:
Post a Comment