பிளாஸ்டிக் ரூபாய் தாள்களை சோதனை ரீதியில் பயன்படுத்தி பார்க்கும் திட்டம் விரைவில் தொடங்கும் என ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் காந்தி தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர்,
முதலில் 10 ரூபாய் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டு சோதிக்கப்படும் என்றும் பிறகு படிப்படியாக மற்ற மதிப்பிலான பிளாஸ்டிக் தாள்கள் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார்.கொச்சி, மைசூர், ஜெய்ப்பூர், புவனேஸ்வர், சிம்லா ஆகிய 5 நகரங்களில் பிளாஸ்டிக்ரூபாய் தாள்கள் சோதிக்கப்படும் என மத்திய அரசு கடந்த ஆண்டே தெரிவித்திருந்தது.
காகித ரூபாய் தாள்களை விட நீடித்து உழைக்க கூடிய பிளாஸ்டிக் தாள்களை கள்ள நோட்டாக அச்சடிப்பதும் கடினமாகும்.
No comments:
Post a Comment