வேலூர்:கலந்தாய்வு நடத்தாததை கண்டித்து, ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில், ஈடுபட்டனர்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பணி மாறுதல் தொடர்பான கலந்தாய்வு நடத்த அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக, வேலூர் மாவட்ட கிளை சார்பில், வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தாண்டவராயன் தலைமையில், ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
No comments:
Post a Comment