பள்ளி வேன்களில் பாதுகாப்பு பணிக்கு ஆசிரியை கூடாது: சி.பி.எஸ்.இ., அறிவிப்பு!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, November 2, 2016

பள்ளி வேன்களில் பாதுகாப்பு பணிக்கு ஆசிரியை கூடாது: சி.பி.எஸ்.இ., அறிவிப்பு!!

பள்ளி வேன்களில் அழைத்து வரப்படும் மாணவர்களின் பாதுகாப்பு பணிக்காக, ஆசிரியைகளை பயன்படுத்தக் கூடாது' என, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து, சி.பி.எஸ்.இ.,
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பள்ளி வேன்களில் அழைத்து வரப்படும் மாணவர்களின் பாதுகாப்புக்கு, தனியாக பெண் காவலர்கள் அல்லது உதவியாளர்களையே பயன்படுத்த வேண்டும்.
கடும் நடவடிக்கை :
மக்கள் கணக்கெடுப்பு, பேரிடர் நிவாரணப் பணிகள், தேர்தல் போன்ற பணிகளைத் தவிர, பள்ளியின் மற்ற நிர்வாகப் பணிகளுக்கு ஆசிரியைகளை பயன்படுத்தக் கூடாது.இதை பள்ளித் தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். இதை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment