ஆசிரியர் தகுதி தேர்வுக்கு மார்ச் முதல் வாரத்தில் விண்ணப்ப விநியோகம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, February 17, 2017

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு மார்ச் முதல் வாரத்தில் விண்ணப்ப விநியோகம்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப விநியோகத்தை மார்ச் முதல் வாரத்தில் தொடங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வை ஏப்ரல் 29, 30 தேதிகளில் (சனி, ஞாயிறு) நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றபோதிலும், தேர்வுக்கான விண்ணப்பங்கள் அச்சடிப்பு, விற்பனை மையங்களைக் கண்டறிவது போன்ற முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

தகுதித் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் மாவட்ட கல்வி அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப விநியோகத்தை மார்ச் முதல் வாரத்தில் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ளன. எனவே, விண்ணப்பங்கள் விற்பதற்காக, ஒவ்வொரு ஒன்றியத்திலும் பொதுத் தேர்வு நடக்காத 2 பள்ளிகளைத் தேர்வுசெய்து, அவற்றின் முகவரிப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உடனே அனுப்ப வேண்டும். விண்ணப்ப விற்பனை தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவுரைகளைப் பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடமின்றி இப்பணியை சிறப்பாக செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment