பாலியல் குற்றங்கள் தடுப்புஆசிரியர்களுக்கு பயிற்சி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, October 11, 2015

பாலியல் குற்றங்கள் தடுப்புஆசிரியர்களுக்கு பயிற்சி

பள்ளி மாணவர்களை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்க, தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. கடந்த சில மாதங்களாக, பள்ளி மாணவர்கள் பாலியல் தொல்லைகளில் சிக்கி வருவது அதிகரித்து வருகிறது.

மாணவர்களை இதிலிருந்து பாதுகாக்க, தேசிய குழந்தைகள் வளர்ச்சி கூட்டமைப்பு நிறுவனம் சார்பில், பெங்களூருவில் டிச., 1,2ம் தேதிகளில் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களிடையே பாலியல் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பயற்சியில் கலந்து கொள்கின்றனர்.

No comments:

Post a Comment