அரசு கணினி தகுதித் தேர்வுக்கு நவ.23 வரை விண்ணப்பிக்கலாம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, October 27, 2015

அரசு கணினி தகுதித் தேர்வுக்கு நவ.23 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசுத்துறைகளில் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் (கிரேடு-3) பணிக்கு அரசு தொழில்நுட்பக் கல்வித் துறையால் நடத்தப்படும் கணினிசான்றிதழ் தேர்வு (கம்ப்யூட்டர் ஆன் ஆபீஸ் ஆட்டோமேஷன்) தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளுக்காக நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள், விண்ணப் பிக்கும்போது கணினி தகுதி தேர்ச்சி பெறாவிட்டாலும் பணி கிடைத்தால் தகுதிகாண் பருவத்துக்கு முன்பாக கண்டிப்பாக கணினி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.இந்த நிலையில், டிசம்பர் மாதம் நடத்தப்பட இருக்கிற அரசு கணினி தகுதித் தேர்வுக்கு நவம்பர் 23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் எஸ்.மதுமதி அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment