ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் போராட்ட ஆயத்த கூட்டம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, October 28, 2015

ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் போராட்ட ஆயத்த கூட்டம்

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக, தர்மபுரியில், போராட்ட ஆயத்த கூட்டம் நடந்தது.
மாநில அமைப்பாளர் ஜனார்தனன் தலைமை வகித்தார். கூட்டத்தில், தொகுப்பூதிய காலத்தை கணக்கிட்டு ஓய்வூதியம்
வழங்க வேண்டும். தேர்வுநிலை தர ஊதியம், ஏற்கனவே உள்ள அரசாணைகள் மற்றும் அரசு கடிதங்களின் படி, 5,400 ரூபாய் வழங்க வேண்டும்.
வெவ்வேறு பாடங்களில் உயர்கல்வி பெற்றுள்ள தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 31ம் தேதி, சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே நடக்கும், ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற் கல்வி ஆசிரியர்கள் கலந்து கொள்வது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment