திறந்தநிலை பல்கலையில் பி.எட் படிப்புக்கு விண்ணப்பிக்க நவ.,30 கடைசி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, October 31, 2015

திறந்தநிலை பல்கலையில் பி.எட் படிப்புக்கு விண்ணப்பிக்க நவ.,30 கடைசி

தொலைநிலையில், பி.எட்., படிக்க விரும்புவோர், நவம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்த பல்கலையில், தேசிய கல்வியியல் கவுன்சில் அனுமதியுடன், 2 ஆண்டு தொலைநிலை பி.எட்., படிப்பு வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப வினியோகம், அக்டோபர் 14-ல் துவங்கியது. ஆசிரியர்களாக பணிபுரிவோர் மற்றும் இளநிலை பட்டம் பெற்றவர்கள் இதில் சேரலாம். மொத்தம், 1,000 பேர் சேர்க்கப்படுவர்.

இதற்கு, நவம்பவர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என பல்கலை அறிவித்துள்ளது. கலந்தாய்வு டிசம்பரில் நடத்தப்படும், ஜனவரி முதல் வகுப்புகள் துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment