ஏப்.,1ம் தேதி முதல் அமலுக்கு வரும் அறிவிப்புகள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, March 28, 2017

ஏப்.,1ம் தேதி முதல் அமலுக்கு வரும் அறிவிப்புகள்

2017-18 நிதி ஆண்டு துவக்கமான ஏப்.,1ம் தேதி முதல் பல்வேறு புதிய அறிவிப்புகள் நடைமுறைக்கு வர உள்ளன.

அவை:

* ரொக்கப் பரிவர்த்தனைக்கான கட்டுப்பாட்டை மத்திய அரசு ரூ.2 லட்சமாக குறைத்தது. இந்த அறிவிப்பு ஏப்.,1 முதல் அமலுக்கு வருகிறது.

* எஸ்.பி.ஐ., எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., ஆக்சிஸ் உள்ளிட்ட வங்கிகள், குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு, ஏப்.,1 முதல் அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளன.

* ரயில் பயணத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது, ‛விகால்ப்' திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தால், காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகள், அதே வழித்தடத்தில் அடுத்ததாக இயங்கும் பிரீமியர் ரயில்களில் பயணிக்கும் திட்டமும் நடைமுறைக்கு வருகிறது.

* வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையைக் கட்டுப்படுத்த பி.எஸ்.,4 கட்டுப்பாட்டுகள் பின்பற்ற வேண்டும் என்ற விதியும் ஏப்., 1 முதல் அமலுக்கு வருகிறது.

No comments:

Post a Comment