சிபிஎஸ்இ பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை ஒரே சீரான தேர்வு முறை. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, March 23, 2017

சிபிஎஸ்இ பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை ஒரே சீரான தேர்வு முறை.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தனது ஆளுகைக்கு உள்பட்ட பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல்
9-ஆம் வகுப்பு வரை படிக்கும்மாணவர்களுக்கு ஒரே சீரான தேர்வு முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முறையை மீண்டும் அமல்படுத்துவது என அண்மையில் முடிவெடுக்கப்பட்டது. 
இந்நிலையில், இப்பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புதிய வகையிலான மதிப்பீட்டு முறையைக் கொண்டு வர வேண்டியது அவசியமாகிறது. தற்போதைய நிலையில், இந்தக் கல்வி முறையில் நிலவும் வேறுபாடுகள் காரணமாக மாணவர்கள் வேறு பள்ளிகளுக்கு மாறும்போது பல்வேறு பிரச்னைகளை அவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்காக, சிபிஎஸ்இ பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை ஒரே சீரான தேர்வு முறை கொண்டு வரப்படவுள்ளது.

No comments:

Post a Comment