CPS- புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள மற்றும் 6-வது ஊதிய குழு பாதிப்பில் உள்ள ஆசிரியர்களே -குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களே தயவு செய்து இந்த கட்டுரையை படிக்கவேண்டாம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, March 26, 2017

CPS- புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள மற்றும் 6-வது ஊதிய குழு பாதிப்பில் உள்ள ஆசிரியர்களே -குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களே தயவு செய்து இந்த கட்டுரையை படிக்கவேண்டாம்

சிறுகணல்

1.       ரூ. 5200 + 2800 பெறும் இடைநிலைஆசிரியர்களுக்கும்,
2.       1.86 பெருக்கத்துடன் ரூ.2800/- பெறும்இடைநிலை
ஆசிரியர்களுக்கும்,
3.       CPS வேண்டாம்; OPS வாழ்வூதியம்மட்டுமே எங்களுக்கு உயிர்நாடியாய்வேண்டுமென்று உறுதியாய் நிற்கும்அனைத்துவகை சுமார் 55ஆயிரம் ஆசிரியர்களுக்கும்,
                                                - “இயக்கங்கள்கடந்துகூட்டு நடவடிக்கைக் குழுக்கள் கடந்து,முகம் & முகவரி கடந்துஏன் அனைத்துமாச்சரியங்களும் கடந்து” – மிகவும்ஆக்கப்பூர்வமாக பாதிக்கப்பட்ட நீங்கள் மட்டும் ஓர்அணியில் இணைந்து நின்று வெற்றிவாகை சூடிட
மனதார வாழ்த்தி வணங்குகிறேன்.
  - உங்கள் வாய்மை வழிகாட்டி,
 சேவியர் ஜோசப் கென்னடி,
 துணைப் பொதுச் செயலாளர்,
  தமிழக ஆசிரியர் மன்றம்.
                                                                                
                                    உங்களுடைய வலியும்,வேதனையும்சகல சௌகரிய ஓய்வூதியத்தலைவர்களுக்கோ (அல்லதுஉங்கள் பிரதானமாய்முன்னிறுத்தி உங்களை வைத்துப் போராடிஉங்களுக்கு ரூ.750/- ம்தங்களுக்கு ரூ.1100/-முதல் ரூ.1300/- (அதாவது GP ரூ.5400/- மற்றும்ரூ.5700/-) பெற்றுக் கொண்ட தலைவர்களுக்கோஒருவேலை புரிந்தாலும்கூட,
·         அவர்களின் ஈகோ மட்டும்ஒருநாளும்அவர்களை விட்டுப் போகப்போவதும் இல்லை.
·         அனைவரும் ஒரு குடையின்கீழ் நின்றுபிரச்சனை தீரும்வரைதொடர்ந்து போராடிவெல்லப்போவதும் இல்லைஇந்தப் பிரித்தாளும்சூழ்ச்சிக்கு அரசா காரணம்?
·         உங்கள் வலியும்வேதனையும் நீங்கப்போவதும் இல்லை.
·         இதனால் அவர்களுக்கு ஒரு கஷ்டமும்இல்லைநஷ்டமும் இல்லைமாறாக இலாபமே !
·         இந்த நிதர்சனத்தை நீங்கள் அறிவார்த்தமாய்உணரச் செய்யவே இம்மடல் என்று எண்ணவேண்டாம்அதையும் தாண்டி சரியானவழிகாட்டும் செயலேயாகும் !
பாதிக்கப்பட்ட மூன்று பிரிவு ஆசிரியர்களையும்பார்த்து நான் மிகவும் வெளிப்படையாகசிலவற்றைக் கேட்டாக வேண்டும்.”
1.     மாநில அரசின் அனைத்து வகை ஊதிய விகிதநிலையினருக்கும் (ஏன் இன்னும் சிலருக்குஉயர்த்திக்கூட வழங்கிய நிலையில்மத்திய அரசுஊழியர்களுக்கு இணையான ஊதிய விகிதம்வழங்கிவிட்டு உங்களுக்கு மட்டும் வழங்காதது;
                                      i.        சமூக நீதிக்குஎதிரானது
                                     ii.        நியாயமற்றசெயல்
என்று உண்மையிலேயே நீங்கள் நம்புகிறீர்களா?
2.  அப்படியானால்செய் அல்லது செத்துமடிஎன்னும் தத்துவத்தின் அடிப்படையில் நான்எனக்கெதிரான இந்த அநீதியைக் களையாமல்ஓயமாட்டேன் என்று மிகவும் வாய்மையாய்உறுதியேற்கிறீர்களா?
3. பாராளுமன்றமும்சட்டமன்றமும் தங்களுக்குOPS வைத்துக் கொண்டு எங்களுக்கு CPS-கொடுக்காமல் இரத்து செய்வது,
                                      i.        தவறு
                                     ii.        அநீதி
                                    iii.        எந்த விதியின்கீழும் நியாயப்படுத்த முடியாது.
                                    iv.        OPS என்பதுஎனது வாழ்வுரிமை,
                                     v.        அது கொடுபடாஊதியம்,அதை அடையாமல் நான் ஓயமாட்டேன்
-       என்று உறுதியாய் சபதம் ஏற்கிறீர்களா?
4.காலத்தேஅறவழி போராடிகுறைந்தபட்சம்முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்கள்தேர்தல் அறிக்கையில்,
                          i.   மத்திய அரசு ஊழியர்களுக்குஇணையாகமாநில அரசு ஊழியர்களுக்கு உள்ளஊதிய முரண்பாட்டைச் சரிசெய்வோம்,
                                                   ii.        CPS –  இரத்து செய்து, OPS- அமல்படுத்துவோம்-என்ற வாக்குறுதி இடம்பெறவில்லையெனில் நாம்ஆட்சி அமைப்பது கடினம்.- என்ற நிலையைஏற்படுத்தாமல் விடமாட்டேன் என்று உறுதிகொண்ட நெஞ்சினராய் இருக்கிறீர்களா?அப்படியானால்இந்த வாய்மை வழிகாட்டிசொல்வதை மனதில் போட்டு வீருநடை போடத்தவறாதீர்கள்ஆம்முதலில் “Rescue Equality Justice” – என்ற சமூக வலைதளக் குழுவைஉருவாக்குங்கள்.
5.     அதில் பாதிக்கப்பட்ட மேற்சொன்ன மூன்றுபிரிவினர் சுமார் 55000 பேரை மட்டும்ஒன்றிணையுங்கள்நான் உட்படபாதிக்கப்படாதஎவரையும் கட்டாயம் உள்ளே சேர்க்காது விலக்கிவையுங்கள்.வேண்டுமானால்வெளியில் இருந்துவழிகாட்ட மட்டும் சொல்லுங்கள்.
6. முழு ஆண்டு விடுமுறையைப் போராட்டநாளாகத் தேர்ந்தெடுங்கள்முற்றுகைமறியல்,வேலைநிறுத்தம் என்று யாருக்கும் இடையூறுசெய்யாது அரசு உள்ளிட்ட அனைவரின் கவனத்தைஈர்க்கும் விதமாக ஓரிடத்தில் 55000 பேரையும்தொடர்ச்சியாகப் பல நாட்கள் கூட்டுவது மட்டுமேஇலக்காக இருக்கட்டும்.
7.     இடம்சென்னைக் கடற்கரையை மக்கள்கடற்கரையாக மாற்றுவதாகவோ அல்லது திண்டுக்கல் மலைக் கோட்டையை மக்கள்கோட்டையாக மாற்றுவதாகவோ அல்லது சிறைநிரப்புவதற்குப் பதிலாக ஸ்டேடியத்தைநிரப்புவதாகவோ இருக்கட்டும்.
8.     அங்கேவாயில் கருப்புத்துணி கட்டியபடிபதாகைகளை ஏந்தி ஒரு மவுனப் புரட்சியை மட்டும்நிகழ்த்துவதாக அமையட்டும்.
9.     அரசு உட்படயார் யாரெல்லாம் இந்தக்வேள்வியின் நியாயத்தை உணர்கிறார்களோஅவர்கள் யாவரும் வாழ்த்துரை வாருங்கள் என்றுபொது அழைப்பு மட்டும் விடுங்கள்.
10. 
                      i.        இப்போராட்டத்தால்,மாணவர்கிளின் கல்வி பாதிக்கப் போவதில்லை.
                     ii.        அரசு எந்திரம் முடங்கப்போவது இல்லை.
                    iii.        பொதுமக்களுக்குஇடையூறு இல்லை.
ஆகவேஇப்போராட்டம் அனைவராலும் நிச்சயம்பாராட்டப்படும் ! நிச்சயம் வெற்றிபெறும் !!
Ø  செய்வீர்களா ? அல்லது
Ø  அறுப்பவன் பின்னால் செல்லும் ஆடுபோல்இருப்பீர்களா ? அல்லது
Ø  “Satisfied with what you have” என்றுவசனம் பேசப் போகிறீர்களா ?
சிந்திப்பீர் ! செயல்படுவீர் !!
                        - இவ்வாறு எழுதுவது விரக்தியின்விளிம்பிநின்று என எண்ண வேண்டாம்நம்பிக்கைஒளிக்கீற்றிநின்றேயாம் !!
நன்றி !
                                                                                                                                                                 இவண்,
                                      சேவியர் ஜோசப்கென்னடி.
                                      துணைப் பொதுச்செயலாளர்,
                                 தமிழக ஆசிரியர்மன்றம்.திண்டுக்கல்

No comments:

Post a Comment