2019-ம் ஆண்டு எஸ்எஸ்எல்சி செய்முறைத் தேர்வு பயிற்சி வகுப்பு: தனித்தேர்வர்கள் 30-க்குள் பதிவுசெய்ய வேண்டும் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, June 7, 2018

2019-ம் ஆண்டு எஸ்எஸ்எல்சி செய்முறைத் தேர்வு பயிற்சி வகுப்பு: தனித்தேர்வர்கள் 30-க்குள் பதிவுசெய்ய வேண்டும்

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுக்கான செய்முறை பயிற்சி வகுப்புக்கு தனித்தேர்வர்கள் ஜூன் 30-ம் தேதிக்குள் பதிவுசெய்ய வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வு கள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:

ஜூன் 8 முதல் 30-ம் தேதி வரை

2018-2019-ம் கல்வி ஆண்டில் (அடுத்த ஆண்டு) மார்ச் மாதம் நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள நேரடி தனித்தேர்வர்களும் (முதல்முறையாக அனைத்துப் பாடங்களையும் எழுதுபவர்கள்), ஏற்கெனவே பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்தவர்களும் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர தங்கள் பெயர்களைப் பதிவுசெய்ய வேண்டியது அவசியம்.

அவர் கள் ஜூன் 8 முதல் 30-ம் தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் பெயரைப் பதிவு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பப் படிவத்தை அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து, 2 நகல்கள் எடுத்து மாவட்ட கல்வி அலுவலரிடம் ஜூன் 30-ம் தேதிக்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும்.

80 சதவீதம் வருகை

தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் பள்ளிகளுக்குச் சென்று செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டும்.

பயிற்சி வகுப்புகளுக்கு 80 சதவீதம் வருகை தரும் தனித்தேர்வர்கள் மட்டுமே அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர்.

பயிற்சி பெற்ற தனித்தேர்வர் கள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரைத் தொடர்புகொண்டு செய்முறைத் தேர்வு நடத்தப்படும் நாள், மையம் குறித்த விவரங்களை அறிந்து தவறாமல் செய்முறைத் தேர்வை எழுதவேண்டும்.

செய்முறைத் தேர்வு பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளாத தேர்வர்களின் விண்ணப்பம் பொதுத்தேர்வுக்கு கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment