குறைந்­த­பட்ச இருப்பு தொகை வங்­கிகள் கணக்­கி­டு­வது எப்­படி? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, March 13, 2017

குறைந்­த­பட்ச இருப்பு தொகை வங்­கிகள் கணக்­கி­டு­வது எப்­படி?

வங்­கி­களில் சேமிப்புக் கணக்கில் குறைந்­த­பட்ச, மாத சரா­சரி இருப்புத் தொகை இல்­லா­விட்டால், வாடிக்­கை­யா­ளர்கள், மாதம், 600 வரை அப­ராதம் செலுத்தும் நிலை தற்­போது ஏற்­பட்­டுள்­ளது. 

வங்கி சேமிப்புக் கணக்கில், பண இருப்பு இருந்­தாலும், இல்­லா­விட்­டாலும், அதைப் பற்றி வாடிக்­கை­யா­ளர்கள் கவ­லைப்­ப­டாத காலம் ஒன்று இருந்­தது. இப்­போ­தெல்லாம் அப்­படி இருக்க முடி­யாது. வங்­கியில் ஒரு மாதத்தில் குறைந்­த­பட்சம், குறிப்­பிட்ட அளவு தொகையை எப்­போதும் இருப்பு வைத்­தி­ருக்­க­வேண்டும் என்ற நிலை, தனியார் வங்­கி­களில் கட்­டா­ய­மா­கி­விட்­டது. அது, ‘எம்.ஏ.பி.,’ என, குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. இப்­போது, பொதுத் துறை வங்­கி­யான, பாரத ஸ்டேட் வங்­கியும், ‘எம்.ஏ.பி.,’யை, அமல்­ப­டுத்தப் போவ­தாக அறி­வித்­தி­ருப்­பது, வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டையே அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அவ்­வங்கி, ‘எம்.ஏ.பி.,’ தொகையை, வைத்­தி­ருக்­காத, சேமிப்புக் கணக்கு வாடிக்­கை­யா­ளர்­க­ளிடம், அப­ராதம் வசூ­லிக்­கப்­படும் என, அறி­வித்­துள்­ளது. 
மத்­திய அரசு அறி­முகம் செய்த, பூஜ்­ஜிய இருப்பு, ‘ஜன்தன்’ வங்கிக் கணக்கு திட்­டத்தின் கார­ண­மாக ஏற்­பட்­டுள்ள கூடுதல் செல­வு­களை சமா­ளிப்­ப­தற்­காக, இந்த முடிவை எடுத்­தி­ருப்­ப­தாக அவ்­வங்கி கூறி­யுள்­ளது. 
அப­ராதம் எவ்­வ­ளவு? பொது­வாக, வங்­கிகள், மாந­கரம் மற்றும் நகரம்; சிறிய நகரம்; ஊரகம்; மற்றும் கிரா­மப்­புறம் என, பல்­வேறு வகை­யாக, வாடிக்­கை­யா­ளர்­களைப் பிரித்து, எம்.ஏ.பி., தொகையை, நிர்­ண­யித்­துள்­ளன. அந்த, எம்.ஏ.பி., இருப்பு குறை­வாக இருந்தால், அதற்கு ஏற்ப, அவை அப­ரா­தமும் விதிக்­கின்­றன. அது, ஒவ்­வொரு வங்­கிக்கும் சிறிது மாறு­ப­டு­கி­றது. பொது­வாக, எம்.ஏ.பி., அளவு 2,500 ரூபாயில் துவங்­கு­கி­றது; பின், 2,500 – 5,000 ரூபாய்; 5,000 – 7,500; மற்றும் 7,500 – 10,000 என, பல வகை­யாக பிரிக்­கப்­பட்டு, அதற்­கேற்ப அப­ராதம் வசூ­லிக்­கப்­ப­டு­கி­றது. மாந­க­ரப்­ப­குதி வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு, பெரும்­பாலும், எம்.ஏ.பி., 10 ஆயிரம் ரூபா­யாக உள்­ளது. கிரா­மங்­களில், அது, 1,000 ரூபா­யாக நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. எச்.டி.எப்.சி., வங்­கியில், மாந­கர பகு­தியில், எம்.ஏ.பி., தொகை வைத்து இ­ருக்­கா­விட்டால், அதி­க­பட்சம், 600 ரூபாய் அபராதம் விதிக்­கப்­ப­டு­கி­றது. ஐ.சி.ஐ.சி.ஐ.,யில், 450 ரூபாய்; ஆக்சிஸ் வங்­கியில், 350 ரூபாய்; பாரத ஸ்டேட் வங்­கியில், 100 ரூபாய் என, வங்­கி­க்கு வங்கி அது மாறு­ப­டு­கி­றது. இவற்­றுடன் கூடு­த­லாக, 14% சேவை வரி மற்றும் 0.5% கிருஷி கல்யாண் மற்றும் 0.5% ஸ்வச் பாரத் வரி விதிக்­கப்­ப­டு­கி­றது. பாரத ஸ்டேட் வங்­கியில், மாந­கர கிளை­களில், ‘எம்.ஏ.பி.,’ 5,000 ரூபா­யாக நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. 
நக­ரங்­க­ளுக்கு, 3,000 ரூபாய்; சிறிய நக­ரங்­க­ளுக்கு, 2,000 ரூபாய்; மற்றும் கிரா­மங்­க­ளுக்கு, 1,000 ரூபா­யாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அப­ரா­தத்தை பொறுத்­த­வரை, 20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விதிக்­கப்­ப­ட­வுள்­ளது. வங்­கிகள், எம்.ஏ.பி., தொடர்­பான அப­ரா­தங்­களை செலுத்­தா­த­வர்­க­ளுக்கு, வங்­கிகள், இ–மெயில், எஸ்.எம்.எஸ்., மூல­மாக, தகவல் அனுப்­பு­கின்­றன. அப்­ப­டியும் அப­ரா­தத்தை செலுத்­தா­விட்­டாலோ, இருப்பு பரா­ம­ரிக்­கப்­ப­டா­விட்­டாலோ, அப­ராதம் கூடிக் கொண்டே போகும். அந்த சேமிப்புக் கணக்கில் பணம் டிபாசிட் செய்­யப்­ப­டும் ­போது, அந்த நிலுவைத் தொகை வசூ­லிக்­கப்­ப­டு­கி­றது. எனினும், வங்கிக் கணக்­கு­களை ரத்து செய்­யப்­ப­டு­வ­தில்லை; சட்­ட­ரீ­தி­யான நட­வ­டிக்­கையோ பெரும்­பாலும் எடுக்­கப்­ப­டு­வ­தில்லை என்­பது ஆறுதல்!
மாத சரா­சரி கணக்­கீடு எப்­படி? வங்­கியில் குறைந்­த­பட்ச இருப்புத் தொகை வைத்­தி­ருக்­கா­த­வர்­க­ளுக்கு, அப­ராதத் தொகை, ஒவ்­வொரு மாதத்தின் இறுதி நாளில் விதிக்­கப்­ப­டு­கி­றது. அது, மாத சரா­சரி குறைந்­த­பட்ச இருப்பு அடிப்­ப­டையில் கணக்­கி­டப்­ப­டு­கி­றது. இதை கணக்­கி­டு­வது எப்­படி? ஒவ்­வொரு நாள் இறு­தி­யிலும், சேமிப்புக் கணக்கில் மீதம் இருக்கும் தொகை கணக்கில் எடுத்துக் கொள்­ளப்­பட்டு, 30 நாளும் அவ்­வாறு தின­சரி கணக்­கி­டப்­படும். அதை மொத்­த­மாகக் கூட்டி, வரும் தொகையை, 30 அல்­லது 31ல் வகுத்தால் வரும் தொகை தான் மாத குறைந்­த­பட்ச சரா­சரி இருப்புத் தொகை ஆகும். 
மெட்ரோ வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­கு!
வங்கி எம்.ஏ.பி., அப­ராதம் (ரூபாயில்)எச்.டி.எப்.சி., 10,000 150–600 ஸ்டேட் வங்கி 5,000 50–100 ஐ.சி.ஐ.சி.ஐ., 10,000 350–450 ஆக்சிஸ் 10,000 350**ஆக்சிஸ் வங்­கியில், ஒவ்­வொரு 100 ரூபாய் இருப்பு குறை­வுக்கும், 10 ரூபாய் அப­ரா­தத்­தொகை, 350 ரூபாய்க்கு மிகாமல் வசூ­லிக்­கப்­ப­டு­கி­றது

No comments:

Post a Comment