*"கதை வண்டி"*-சிறுவர்களுக்காக, சிறுவர்களே கதை எழுதும் பயணம்! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, November 29, 2017

*"கதை வண்டி"*-சிறுவர்களுக்காக, சிறுவர்களே கதை எழுதும் பயணம்!

*"கதை வண்டி"*
-சிறுவர்களுக்காக, சிறுவர்களே கதை எழுதும் பயணம்!

தமிழில் சிறுவர்களுக்கான கதைகளை அவர்களே எழுதும்போது அவை இன்னும் உயிர்ப்போடு இருக்கும். அதற்கான ஒரு முயற்சியே இந்த ‘கதை வண்டி’ பயணம்.
தமிழில் கதைகள் எழுத ஆர்வமாக இருக்கும் 20 சிறுவர்களுடன் நேரிலும், அஞ்சல் மற்றும் தொலைபேசி வழியாகவும் ஒரு வருடம் பயணிக்க இருக்கிறோம். பயணத்தின் முடிவின் ஒவ்வொருவரின் கதைகளையும் தனித்தனிப் புத்தகமாக்கி, சிறப்பான விழாவில் வெளியிடவும் இருக்கிறோம்.

செய்யவேண்டியது:
உங்கள் வீட்டில்/பள்ளியில் கதை எழுத ஆர்வமாக இருக்கும் பிள்ளைகள் இருப்பின், அவர்களே சொந்தமாக எழுதிய கதையை அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும். தங்களைப் பற்றிய சுய அறிமுகக் குறிப்பை (பெயர், பெற்றோர், படிக்கும் வகுப்பு/பள்ளி, தொடர்பு எண், முகவரி உள்ளிட்டவை) அத்துடன் இணைக்கவும்.

வயது : 9 வயது முதல் 14 வயது வரை
தேர்ந்து எடுக்கப்படும் 20 குழந்தைகளுடன் ஒரு வருடம் நாங்கள் பயணிப்போம். அதில் அவர்களுக்குள் இருக்கும் கதை எழுதும் ஆற்றலை வெளிக்கொணர உதவுவோம்.
கதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : டிசம்பர் 28- 2017
மின்னஞ்சல் - kathaivandi@gmail.com
அஞ்சல் முகவரி -
விழியன், 2A, சாந்தமாள் தெரு, சிவன் நகர், துண்டலம், சென்னை - 600077

தொடர்பு எண்: 9094009092
ஒருங்கிணைப்பு:
விழியன் & வித்யா
விஷ்ணுபுரம் சரவணன்
வெற்றிச்செழியன்

No comments:

Post a Comment