இலவச கல்வி அளிக்கும் மிட்டல்! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, November 26, 2017

இலவச கல்வி அளிக்கும் மிட்டல்!

சத்யபாரதி பல்கலைக்கழகத்தில் பயிலும் ஏழை மாணவர்களின் கல்விச் செலவுக்கு சுனில் பாரதி மிட்டல் தனது சொத்தில் 10
சதவிகிதத்தை அளித்துள்ளார்.
இந்தியாவில் முக்கிய கோடீஸ்வர்களில் ஒருவரான சுனில் பாரதி மிட்டல் தனது சொத்தில், ரூ.7000 கோடி மதிப்பிலான பணத்தைக் கொண்டு சத்யபாரதி பல்கலைக்கழகம் தொடங்கி ஏழை மாணவர்களுக்கு இலவச அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி அளிக்கத் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து மிட்டல் கூறுகையில், “நாட்டில் கல்வியை மேம்படுத்துவதே எங்கள் தொண்டு நிறுவனங்களின் நோக்கமாகும். இதைத் தொடர்ந்து நியாயாபாரதி மற்றும் சத்யபாரதி அபிஹியான் போன்ற மற்ற முயற்சிகளையும் சிறிய அளவில் தொடங்கவுள்ளோம்” என்று கூறியுள்ளார்.
தற்போது 60 வயதான மிட்டல், தனது சொத்தில் பெரும்பகுதியைத் தொண்டு நிறுவனங்களுக்குச் செலவிட்டு, இந்தப் பட்டியலில் மிட்டல் முதலிடத்தில் இருக்கிறார். கடந்த நவம்பர் 19ஆம் தேதி இன்ஃபோசிஸ் நிறுவனத் தலைவர் நந்தன் நிலேகனி மற்றும் அவரது துணைவி ரோகிணி தங்கள் சொத்தில் பாதியைத் தொண்டு நிறுவனங்களுக்கு அளிப்பதாக உறுதியளித்தனர். இவர்களைப் போல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தலைவர் பில்கேட்ஸ், அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டாளர் வாரன் பஃபட் ஆகியோரும் பெரும் தொகையைத் தொண்டு நிறுவனங்களுக்கு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சத்யபாரதி பல்கலைக்கழகம் முதலில் வட இந்தியாவில் தொடங்கப்பட்டது, இன்று உலகம் முழுவதும் உள்ள 10,000 மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கல்வியில் பின்தங்கிய, ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்கப்படவுள்ளது. முன்னதாக பாரதி தொண்டு நிறுவனம், சத்யபாரதி பள்ளி என்ற பெயரில் 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆரம்பக்கல்வி முதல் உயர்நிலைக் கல்வி வரை இலவசமாக வழங்கி வருகிறது. மிட்டல் வழங்கிய 7000 கோடி ரூபாய் பள்ளிகளின் வளர்ச்சிக்கும் சேர்த்தே என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து மிட்டல், “நாங்கள் இலவச ஆரம்பக் கல்வி அளித்தபோது மாணவர்கள் உயர்நிலைக் கல்விக்கு வேறு இடங்களுக்குச் சென்று வந்ததை உணர்ந்தோம். உடனே உயர்நிலைக் கல்வியையும் இங்கேயே வழங்க முடிவு செய்தோம். இப்போது உயர்நிலை கல்வி பயிலும் மாணவர்கள் நிதியின்மை காரணமாகக் கல்லூரி பயிலமுடியாமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்காக இந்தப் பல்கலைக்கழகம் தொடங்கப்படவுள்ளது” என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment