மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் டிஏ உயர்வு -தமிழக அரசு ஊழியர்களுக்கு எப்போது ? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, September 16, 2018

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் டிஏ உயர்வு -தமிழக அரசு ஊழியர்களுக்கு எப்போது ?

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் டிஏ உயர்வு -தமிழக அரசு ஊழியர்களுக்கு எப்போது ?
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி
(டிஏ)உயர்த்தப்பட்டதுபோல தங்களுக்கும் உயர்த்தப்படுமா என தமிழக அரசு ஊழியர்கள், 
ஆசிரியர்கள்  எதிர்பார்க்கின்றனர். மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு  அடிப்படை சம்பளத்துடன், அகவிலைப்படியும்சேர்த்துவழங்கப்படுகிறது.
 இந்தஅகவிலைப்படி ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை உயர்த்தப்படுவது வழக்கம். ஜனவரி, ஜூலை ஆகியமாதங்களில் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
 மத்தியஅரசு அகவிலைப்படியை உயர்த்திய உடன் மாநிலஅரசு ஊழியர்களுக்கு அந்தந்த  மாநில  அரசுகள்  அகவிலைப்படியை உயர்த்தி  அறிவிக்கும். இதனால் தங்களுக்கு  எப்போது  அகவிலைப்படி உயர்த்தப்படும்  என மாநில அரசு ஊழியர்கள் மத்தியில் எதிர்பார்ப்புஉருவாகியுள்ளது.
  தற்போது மத்திய அரசு ஊழியர்களான நமது மாநிலத்தில் பணிபுரியும் IAS, IPS ,IFS  அலுவலர்களின் DA வை 2% உயர்த்தி தமிழக அரசு ஆணை  பிறப்பித்துள்ளது .
இந்த மாத  ஊதியத்துடன் அகவிலைப்படி  உயர்த்தி  வழங்கப்படுமா  எனஅரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே தமிழகத்திலும் 2 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி இந்த மாத ஊதியத்துடன் வழங்கவும், அகவிலைப்படி நிலுவைத் தொகையை சேர்த்து வழங்கவும் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment