தொழிற்கல்வி ஆசிரியர்கள் அனைவருக்கும் தேர்வு நிலை தர ஊதியம் ரூ.5400 வழங்கவும், 1.1.2006 முதல் கருத்தியலாகவும், 1.4.2013 முதல் பணப் பயன் பெறும் வகையிலும் உத்தரவு !!
தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு தர ஊதியம் வழங்க நீதி மன்றம்உத்தரவிட்டதை தொடர்ந்து, உடனடியாக அதை அமல்படுத்தவேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநரிடம் தொழிற்கல்விஆசிரியர்கள் நேற்று மனு கொடுத்தனர்.
அரசுமற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பதவி உயர்வுஇல்லா பணியிடத்தில் தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணியாற்றிவருகின்றனர். அவர்களின் நீண்டநாள் கோரிக்கையில் ஒன்றான தரஊதியம் கேட்டு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்குதொடர்ந்தனர்.
அந்தவழக்கில் மேற்கண்ட ஆசிரியர்களுக்கு தர ஊதியம் வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்துஅரசு ஆணையும் வெளியிட்டுள்ளது. அந்த ஆணையின்படி, தரஊதியம் விரைவில் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்று கேட்டுதொழிற்கல்வி ஆசிரியர்கள் நேற்று பள்ளிக் கல்வி இயக்குநர்ராமேஸ்வர முருகனை சந்தித்து மனு கொடுத்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மேனிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் ஜெனார்த்தனன் கூறியதாவது:
உயர்நீதிமன்றக் கிளையின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தி பதவிஉயர்வு இல்லா பணியிடத்தில் பணியாற்றி வரும் தொழிற்கல்விஆசிரியர்கள் அனைவருக்கும் கடந்த 1.1.2006 முதல் கருத்தியலாகவும், 1.4.2013 முதல் பணப்பயன் பெறும் வகையிலும் நிதித்துறைஅரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு தொழிற்கல்வி ஆசிரியர்கள்நன்றி தெரிவித்துக் கொள்கின்றனர். அந்த வழக்கின் தீர்ப்பைநடைமுறைப்படுத்தி நிதித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில் தொழிற்கல்வி ஆசிரியர்கள் அனைவருக்கும் தேர்வு நிலை தரஊதியம் ரூ.5400 வழங்கவும், 1.1.2006 முதல் கருத்தியலாகவும், 1.4.2013 முதல் பணப் பயன் பெறும் வகையிலும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தஅரசாணையை உடனடியாக பள்ளிக் கல்வித்துறைநடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டு பள்ளிக் கல்விஇயக்குநர் ராமேஸ்வர முருகனை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஜெனார்த்தனன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment