இலவச காலணி லாரி விடுவிப்பு ! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, March 22, 2016

இலவச காலணி லாரி விடுவிப்பு !

சண்டிகரில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு, கன்டெய்னர் லாரியில் கொண்டு வரப்பட்ட இலவச காலணிகளை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.சேலம் அருகே உள்ள, தொப்பூர் பிரதான சாலையில் நேற்று முன்தினம் அதிகாலை, 2:00 மணியளவில் பறக்கும் படையினர்
வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சண்டிகரில் இருந்து ஈரோடு சென்ற ஒரு லாரியை சோதனை செய்தனர். அதில், பண்டல் பண்டலாக காலணிகள் இருந்தன. லாரியை பறிமுதல் செய்து, மேட்டூர் சப் - கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். சம்பவம் குறித்து, மேட்டூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மேகநாத ரெட்டி கூறுகையில், ''லாரி ஓட்டுனர்கள் உரிய ஆவணங்களை வழங்கியதால், காலணிகளுடன் லாரி விடுவிக்கப்பட்டது,'' என்றார்.

No comments:

Post a Comment