பொறியியல் படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் ஏப்ரல் 25ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை செயலர் இந்துமதி தெரிவித்துள்ளார்.மேலும் இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- பொறியியல் படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் ஏப்ரல் 25ம் தேதி தொடங்கும்.
இதற்கென 2 லட்சத்து 90 ஆயிரம் விண்ணங்கள் தயார் நிலையில் உள்ளன. 60 மையங்கள் மூலம் விண்ணப்பங்களைவிநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
விண்ணப்ப விநியோகம் மற்றும் பொறியியல் கவுன்சிலிங் தொடங்கும் தேதி உயர்கல்வித்துறை செயலரின் ஒப்புதல் கிடைத்தவுடன் அறிவிக்கபடும் என அவர் கூறியுள்ளார்.பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் வெள்ளிக்கிழமையோடு முடிவடைய உள்ள நிலையில்,அவர்கள் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்களை எவ்வித சிரமங்களும் இன்றி பெற சென்னை அண்ணா பல்கலைக்கழகம் செய்து வருகிறது.
No comments:
Post a Comment