உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, மாவட்ட தலைநகரங்களில் தயாராக உள்ள வாக்காளர் பட்டியல் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, March 4, 2017

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, மாவட்ட தலைநகரங்களில் தயாராக உள்ள வாக்காளர் பட்டியல் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது

தமிழக உள்ளாட்சி தேர்தல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் நடத்த தற்காலிக தடை விதித்தது.

இந்நிலையில் வரும் மே மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாவட்ட தலைநகரங்களில் தயார் நிலையில் உள்ள வாக்களார் பட்டியலை, அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு அனுப்பி சரிபார்க்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணிகள் நேற்று தொடங்கியுள்ளன. வாக்காளர் பட்டியலை வார்டு வாரியாக பிரிக்கும் பணியை துணை பிடிஓக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment