தமிழகம் முழுவதும் குறைந்த மாணவர்களைக் கொண்ட 46 அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் நூலகமாக மாற்றம் ( மாவட்ட வாரியான பள்ளிகளின் எண்ணிக்கை ) - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, August 6, 2019

தமிழகம் முழுவதும் குறைந்த மாணவர்களைக் கொண்ட 46 அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் நூலகமாக மாற்றம் ( மாவட்ட வாரியான பள்ளிகளின் எண்ணிக்கை )

தமிழகம் முழுவதும் குறைந்த மாணவர்களைக் கொண்ட 46 அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் நூலகமாக மாற்றம் ( மாவட்ட வாரியான பள்ளிகளின் எண்ணிக்கை )
தமிழகத்தில் குறைந்த மாணவர் களைக் கொண்ட 46அரசு தொடக்கப்  பள்ளிகளில்ஆக.10ம் தேதிக்குள் நூலகம்அமைக்க வேண்டும் என நூலகத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்கள் பணி நிரவல்மூலம் வேறு பள்ளிகளுக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, குறைந்த  எண்ணிக்கை மற்றும் மாணவர்கள் இல்லாத அரசுப் பள்ளிகளை மூடுவதற்கு  தமிழக அரசு திட்டமிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அத்தகைய பள்ளிகளை மூடாமல், அங்குநூலகம் அமைப்பதற்கு நூலகத் துறைக்கு கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி அருகே குளத்தூர் மற்றும் ஆவுடையார் கோவில்அருகே உள்ள சின்னப்பட்ட மங்களம் ஆகிய அரசு தொடக்கப் பள்ளிகள் உட்பட தமிழகத்தில் மொத்தம் 46 அரசு தொடக்கப் பள்ளிகளில்  நூலகம்  அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. இந்த உத்தரவு குறித்த சுற்றறிக்கை கடந்தஜூலை 31-ம்  தேதி  நூலகத்துறையால்  அனுப்பப்பட்டுள்ள நிலையில்  அதற்கான பணிகளில்  அத்துறை அலுவலர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
 
இதுகுறித்து நூலகத் துறைஅலுவலர்கள் தரப்பினர், நாளிதழிடம் கூறியதாவது:
மாவட்ட வாரியானபள்ளிகளின் எண்ணிக்கை
தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 6 பள்ளிக் கட்டிடங்களில் நூலகம்அமைக்கப்பட உள்ளது. இதே போல,  வேலூர், சிவகங்கையில் தலா 4 பள்ளிகளிலும், விருதுநகர், திருவண்ணாமலை, திருப்பூர், நாமக்கல், கிருஷ்ணகிரியில் தலா 3 பள்ளி களிலும் நூலகம்தொடங்கப்பட உள்ளது. மேலும், விழுப்புரம், தூத்துக்குடி புதுக்கோட்டை,  கரூர், திண்டுக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் தலா 2பள்ளிகளிலும், திருவள்ளூர், தேனி, நாகப்பட்டினம், காஞ்சிபுரம் மற்றும் கோவையில் தலா 1 பள்ளியிலும்நூலகம் அமைக்கப்பட உள்ளது.
நூலகம் அமைக்க உள்ளஊர்களில் வாடகைக்கட்டிடத்தில் நூலகம்இயங்கினால், அது பள்ளிக்கட்டிடத்துக்கு மாற்றப் படும்.இல்லையெனில், முதல்கட்டமாக 500 புத்தகங்களைக்கொண்டு நூலகம்தொடங்கப்படும்.
இந்நூலகம் காலை 9மணியில் இருந்து மாலை 4மணி வரை செயல்படும்.பிளஸ் 2-வுடன்  சிஎல்ஐஎஸ் படித்தவர்கள், ரூ.315 தினக்கூலி அடிப்படையில் இங்கு தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்படுவர்.
பள்ளிக் கட்டிடங்களில் அமைக்கப்படும் நூலகத்தால் ஏற்படும் செலவுகள், நூலக ஆணைக்குழு நிதியில் இருந்து பார்த்துக் கொள்ளப்படும். 46இடங்களிலும் புதிய நூலகங்களை ஆக.10-ம்தேதிக்குள்  அமைத்து, அதற்கான விவரங்களை தெரிவிக்க வேண்டும் என நூலகத் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார் என தெரிவித்தனர்.
நூலகம் அமைக்க உள்ள ஊர்களில் வாடகைக் கட்டிடத்தில் நூலகம் இயங்கினால், அது பள்ளிக் கட்டிடத்துக்கு மாற்றப்படும்

No comments:

Post a Comment