பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் ஆன்லைன் திருத்தம் மேற்கொள்ள இன்று மற்றும் நாளை 2 நாள் அவகாசம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, January 12, 2015

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் ஆன்லைன் திருத்தம் மேற்கொள்ள இன்று மற்றும் நாளை 2 நாள் அவகாசம்

 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில், ஆன்லைன் மூலம் இரண்டு நாட்கள் வரை திருத்தம் மேற்கொள்ளலாம்" என, அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.
அவரது உத்தரவு: மார்ச்சில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர், புகைப்படம், பிறந்ததேதி, தந்தை, தாய், பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களை www.tndge.in என்ற தேர்வுத்துறை இணையதளத்தில் பள்ளி வாரியாக பதிவேற்றம் செய்ய ஜன.,1 முதல் 6 வரை தலைமையாசிரியர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.
அப்பணிகள் முடிந்த நிலையில், அதை முழுமையாக சரிபார்த்து ஆன்லைன் மூலம் இன்று மற்றும் நாளை (ஜனவரி 12 மற்றும் 13ம் தேதிகள்) தேவைப்படும் திருத்தம் மேற்கொள்ளலாம். அதன்பின், திருத்தம் செய்ய இயலாது என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment